Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவை தளர்த்திய இலங்கை மத்திய வங்கி!

ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவை தளர்த்திய இலங்கை மத்திய வங்கி!

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கு தமது ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவை இலங்கை மத்திய வங்கி தளர்த்தியுள்ளது.

மேக்ரோ பொருளாதார அபிவிருத்திகளை, குறிப்பாக உள்ளூர் அந்நிய செலாவணி சந்தை நிலவரங்களின் அபிவிருத்திகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஊடாக, ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாயாக மாற்றுவதற்கான காலக்கெடுவை கணிசமாக தளர்த்திய இலங்கை மத்திய வங்கி “2024 ஆம் ஆண்டு இல. 01 இலங்கைக்கு ஏற்றுமதி வருவாயைக் கொண்டுவருவதற்கான விதிகளை” வெளியிட்டது.

மேலும் இது 01.07.2024 திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானி எண் 2391/02 இல் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி விதிகள் 04.09.2024 அன்று பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு அன்று முதல் நடைமுறைக்கு வந்தன.

இந்த அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளுக்குப் பயன்படுத்திய பின்னர், பொருட்களை ஏற்றுமதி செய்பவர்கள் தங்கள் ஏற்றுமதி வருமானத்தை கட்டாயமாக இலங்கை ரூபாயாக மாற்றுவதற்குப் பொருந்தும் காலம், ஏற்றுமதி வருமானம் கிடைத்த நாளிலிருந்து மூன்று (03) மாதங்கள் முடிந்த பின்னர் பத்தாவது நாள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முந்தைய விதிகளின்படி, ஏற்றுமதி வருமானம் பெறப்பட்ட திகதியைத் தொடர்ந்து மாதத்தின் ஏழாவது நாளில் சம்பந்தப்பட்ட நிலுவைகள் கட்டாயமாக இலங்கை ரூபாயாக மாற்றப்பட்டிருக்க வேண்டும்.

இந்த விதிகளை அந்நிய செலாவணி திணைக்களத்தின் இணையத்தளத்தில் (www.dfe.lk) அணுக முடியும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 10 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு
காணொளிகள்

வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 10 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

May 21, 2025
வாழைச்சேனையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தரை இழுத்துச் சென்ற முதலை
செய்திகள்

வாழைச்சேனையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தரை இழுத்துச் சென்ற முதலை

May 21, 2025
ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்
செய்திகள்

ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்

May 21, 2025
அமெரிக்கா- சுவிஸ் நாடுகளின் தூதுவர்களை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய பேரவை சந்திப்பு
அரசியல்

அமெரிக்கா- சுவிஸ் நாடுகளின் தூதுவர்களை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய பேரவை சந்திப்பு

May 21, 2025
மட்டக்களப்பில் 42 பயனாளிகளுக்கு மானிய வீடமைப்பு திட்ட காசோலை வழங்கும் நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் 42 பயனாளிகளுக்கு மானிய வீடமைப்பு திட்ட காசோலை வழங்கும் நிகழ்வு

May 21, 2025
ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமெனக் கூறி குழப்பம் விளைவித்த நபர் கைது
செய்திகள்

ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமெனக் கூறி குழப்பம் விளைவித்த நபர் கைது

May 21, 2025
Next Post
அனைவரும் அனுரவை ஜனாதிபதியாக்க முன்வர வேண்டும்; சிவலிங்கம் கமலேஸ்வரன் வேண்டுகோள்!

அனைவரும் அனுரவை ஜனாதிபதியாக்க முன்வர வேண்டும்; சிவலிங்கம் கமலேஸ்வரன் வேண்டுகோள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.