Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் வாக்குகளின் எண்ணிக்கை 70 வீதத்தை தொட்டது!

மட்டக்களப்பில் வாக்குகளின் எண்ணிக்கை 70 வீதத்தை தொட்டது!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் 3 இலட்சத்து 6 ஆயிரத்து 852 பேர் வாக்களித்து 70 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 81 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜே.ஜே. முரளிதரன் தெரிவித்தார்.

நாட்டின் 09 வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தோர்தல் இன்று சனிக்கிழமை (21) பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலச்சத்து 49 ஆயிரத்து 686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததுடன், இலங்கையில் ஆகக்குறைந்த வாக்களார்களான இரண்டு பேரை கொண்ட மாந்தீவு வைத்தியசாலை வாக்களிப்பு நிலையம் உட்பட 442 வாக்களிப்பு நிலையங்களில் இந்த வாக்களிப்பு இடம்பெற்றது. இந்த தேர்தல் கடமையில் 6750 அரச உத்தியோகத்தர்களும் 1514 பொலிசார், விசேட அதிரடிப்படையினர் என பலர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.

இந்த தோர்தலில் ஜனாதிபதி தமிழ் வேட்பாளர் பா. அரியநேந்திரன் அவரது ஊரான அம்பலாந்துறை கலைமகள் வித்தியாலயத்தில் உள்ள வாக்கு சாவடியில் அவரது வாக்குகளை பதிவு செய்தார். அதேவேளை அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, இராஜாங்க அமைச்சர்களான எஸ்.வியாழேந்திரன், சி.சந்திரகாந்தன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரன் ஆகியோர் அவர்களது பிரதேசத்திலுள்ள வாக்கு சாவடியில் வாக்குகளை பதிவு செய்தனர்.

இருந்தபோதும் காலை 7 மணி தொடக்கம் 9 மணி வரை சுமார் 18 வீதமான வாக்குகள் பதியப்பட்டிருந்ததுடன், அதன் பின்னர் மந்தகதியிலேயே வாக்குகள் பதிவு இடம் பெற்றுள்ளது. முஸ்லீம் பிரதேசங்களான ஓட்டுமாவடி, ஏறாவூர், காத்தான்குடி பிரதேசங்களில் மக்கள் அதிகளவான வாக்குகளை பதிவு செய்தனர். ஆனால் தமிழ் பிரதேசங்களில் மக்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாததையடுத்து மந்தகதியிலே வாக்கு பதிவுகள் இடம்பெற்றது.

இதேவேளை சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பெபரல் அமைப்பு, கபே அமைப்பு போன்ற தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு வாக்கு சாவடிகளுக்கும் கள விஜயம் சென்று கண்காணிப்பில் இடுபட்டனர். இதன் போது கபே அமைப்பு 14 வாக்கு சாவடிகளுக்கு விஜயம் மேற்கொண்ட போது அங்கு வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்யும் மேசை சாமாந்தரமாக இருக்கவில்லை எனவும், அதில் ஓட்டை ஓடிசல்கள் இருந்துள்ளதாகவும் இதனால் வாக்கு பதிவு செய்யும் போது அதில் தேசம் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகாமக இருந்துள்ளதாகவும் இதனால் அளிக்கப்படும் வாக்கு செல்லுபடியற்றதாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கபே அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் தேசியமானிய ஏ.சி.எம். மீராஸாஹிப் தெரிவித்தார்

வாக்களிப்புகள் அனைத்தும் மாலை 4 மணிக்கு முடிந்தவுடன், வாக்கு பெட்டிகள் பொலிசாரின் பாதுகாப்புடன் வாக்கெண்ணும் மத்தியஸ்தானமான மட்டக்களப்பு இந்து கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது. இதனை வாக்கெண்ணும் மத்தியஸ்தானத்தில் பெறுப்பேற்கும் நிகழ்வையும் தபால் மூலம் வாக்களித்த வாக்குகளையும், அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜே.ஜே. முரளிதரன் ஆரம்பித்து வைத்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தேசிய நூலக சபை தலைவர் பதவியில் இருந்து ரத்ன ஸ்ரீ விஜேசிங்க விலகல்; காரணத்தை வெளிப்படுத்தினார்!
செய்திகள்

தேசிய நூலக சபை தலைவர் பதவியில் இருந்து ரத்ன ஸ்ரீ விஜேசிங்க விலகல்; காரணத்தை வெளிப்படுத்தினார்!

July 30, 2026
முதியோருக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்கில்!
செய்திகள்

முதியோருக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்கில்!

July 30, 2026
பன்றி வளர்ப்போருக்கு அரசின் புதிய அறிவிப்பு; ஆகஸ்ட் ‘பன்றிக் காப்பீட்டு மாதம்’ என பிரகடனம்!
செய்திகள்

பன்றி வளர்ப்போருக்கு அரசின் புதிய அறிவிப்பு; ஆகஸ்ட் ‘பன்றிக் காப்பீட்டு மாதம்’ என பிரகடனம்!

July 30, 2026
விபத்தால் கொந்தளித்த மக்கள் – கண்டெய்னர் லொறி தீக்கிரை; சாரதி கைது!
செய்திகள்

விபத்தால் கொந்தளித்த மக்கள் – கண்டெய்னர் லொறி தீக்கிரை; சாரதி கைது!

July 30, 2026
மட்டு பாலமீன்மடுவில் குடிநீர், மலசல கூடம் மற்றும் மின்சாரம் இன்றி வாழ்ந்து வரும் 30 குடும்பங்கள்
காணொளிகள்

மட்டு பாலமீன்மடுவில் குடிநீர், மலசல கூடம் மற்றும் மின்சாரம் இன்றி வாழ்ந்து வரும் 30 குடும்பங்கள்

July 30, 2026
இலங்கைக்கு எல் நினோ எச்சரிக்கை; கடுமையான வறட்சி மற்றும் காலநிலை மாற்றம் ஏற்படலாம்!
மட்டு செய்திகள்

இலங்கைக்கு எல் நினோ எச்சரிக்கை; கடுமையான வறட்சி மற்றும் காலநிலை மாற்றம் ஏற்படலாம்!

July 30, 2026
Next Post
தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்படும்!

தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்படும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.