Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுகபோகங்களை இழந்துவிடாமல் இருக்க ஓடித்திரியும் கட்சிகள்!

சுகபோகங்களை இழந்துவிடாமல் இருக்க ஓடித்திரியும் கட்சிகள்!

2 years ago
in அரசியல், சிறப்பு கட்டுரைகள், செய்திகள்

இலங்கையினுடைய பாராளுமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், இதுவரை காலமும் அதிகாரத்தைத் தமக்குள் பகிர்ந்து கொண்ட சிங்கள தரப்பு அரசியல் அதிகார கும்பலும், தமிழ் தரப்பு அதிகார நாசகார விசமிகளும் பதட்டமடைவதை பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

அனுர குமார திசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், இலங்கையில் ஏற்படுகின்ற மாற்றங்கள், இந்த அரசியல் அதிகாரத்தை இதுவரை மாறி மாறி பகிர்ந்து கொண்ட இந்த சமூக அட்டைகள் அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு மீண்டும் அந்த சௌகரியத்தை அடைய முடியாமல் போய்விடும் என்ற பதட்டம் அவர்களுடைய நடவடிக்கைகளில் தெரிய ஆரம்பிக்கிறது.

தெற்கிலே சந்திரிகாவும்,சஜித்தும் ஏன் ரணிலும் கூட தாம் ஒன்றிணைந்து என்.பி.பி யை எதிர்கொள்ள வேண்டும் அல்லது நமது அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என பேச ஆரம்பித்து விட்டார்கள்.


மறுபுறம் வடக்கு கிழக்கில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வெவ்வேறு குழுக்களாக பிரிந்து, சிதைந்து பொது வேட்பாளர் என்றும், சஜித்துக்கு ஆதரவு என்றும், ரணிலுக்கு ஆதரவு என்றும் தங்களுக்குள்ளே முட்டி மோதி, அடிபட்டுக் கொண்டு, அறிக்கை விட்டுக்கொண்ட இந்த சுயநலவாத கும்பல்கள் அனுர மீது ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையும், நாட்டிலேயே ஏற்பட்டிருக்கும் மாற்றத்திற்கான நம்பிக்கை அலையும், எங்கே இதுவரை காலமும் தாம் அனுபவித்த அத்தனை சௌகரியங்களையும், அதிகார பலன்களையும் இழந்து விடுவோமோ என்கின்ற அச்சம் மேலோங்கியவுடன், மீண்டும் கூட்டமைப்பாக இணைய வேண்டுமென்றும், ஒன்றாக தமிழ் தேசியத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் ஓடி திரிவதை பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

இங்கே இவர்களது நோக்கம் தமிழ் தேசியம் தனது இருப்பை இழந்து விடக்கூடாது என்பதல்ல. இதுவரை காலமும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, உழைக்கும் மக்களுக்கு எதிராக தமிழ்த்தேசிய பூச்சாண்டி காட்டி, தமக்குள் மட்டுமே அனுபவித்து வந்த அந்த அதிகார பலமும் அதனுடன் கூடிய பணவளமும் தங்களை விட்டு, புதிய சமூக அக்கறை உள்ள இளைஞர்களை நோக்கி நகர்ந்து விடக் கூடிய அபாயத்தை தடுக்க வேண்டுமாயின் ஒரே வழி இந்த சாக்கடை கட்சிகள் தமக்குள் பிரிந்து நிற்காமல் ஒன்றாக நின்று அந்த அதிகார பலம் தங்களை விட்டு நழுவி விடாமல் பார்த்துக் கொள்வதே அதன் நோக்கமாகும்.

தெற்கிலும் சரி, வடக்கு கிழக்கிலும் சரி இவர்கள் மக்கள் சார்ந்து எப்போதும் சிந்தித்தவர்கள் கிடையாது. மக்கள் சார்ந்து குறைந்தபட்சமேனும் சிந்திக்கின்ற ஒரு அரசியல் சக்தி தன்னை நிலை நிறுத்த முற்படுகின்ற பொழுது இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அச்சம், இவர்களுடைய வேற்றுமைகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு முதலில் தங்கள் இருப்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற நிலையை இவர்களுக்கு தோற்றுவித்திருக்கிறது.

தென் பகுதி மக்கள் எவ்வாறு ஒரு தெளிவான நிலைப்பாட்டுக்கு தங்களை தயார்படுத்தி ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை இலங்கை தேசத்தில் உருவாக்க வேண்டும் என்கின்ற முடிவை துணிந்து எடுத்தார்களோ அதேபோன்று வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் சமூகங்கள் இந்த பீடைகளை மீண்டும் பதவியில் அமர்த்தாது தமது சுயநலத்துக்காகவே இயங்குகின்ற தமது அதிகார நலனை தற்காத்துக் கொள்வதற்காக மக்களின் அழிவின் மேல் சவாரிசெய்கிற இந்த சுயநலக் கூட்டம் விரட்டியடிக்கப்பட வேண்டிய ஒரு பொற்காலம் நவம்பர் 14ஆம் திகதி வடக்கு, கிழக்கு மக்களிடம் கையளிக்கப்பட்டு இருக்கிறது.

இதே சாக்கடைகளை பாராளுமன்றம் அனுப்பிவிட்டு அவர்கள் தீர்வுக்காக போராடுவார்கள் என்று காத்துக் கொண்டிருக்கப் போகிறீர்களா? இல்லை புதியவர்களை தெரிவு செய்து ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் மாற்றத்தில் பங்கு கொண்டு காத்திரமான, சமூக பங்காற்றி தமிழ் பேசும் சமூகங்களின் வளர்ச்சியோடு , நமது அடிப்படை உரிமைகளையும் வென்றெடுக்கும் புதிய இரத்தத்தை பாய்ச்ச வேண்டிய இந்தத் தருணத்தை நாம் தவறவிட போகிறோமா?

மாற்றத்துக்கான சந்தர்ப்பங்கள் எமக்கு ஒவ்வொரு தேர்தலிலும் வந்து விடுவதில்லை. இந்த நவம்பர் மாதம் நடக்க இருக்கின்ற தேர்தல் அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை எங்களுக்கு வழங்குகின்றது .அந்த சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பயன்படுத்த போகிறோமா? இல்லை ஆண்ட பரம்பரை கனவிலே மூழ்கி மேலும் அழிந்து போக போகின்றோமா? என்பதை வாக்குச்சீட்டு கையில் வைத்திருக்கின்ற ஒவ்வொரு வடக்கு கிழக்கு வாழ் குடிமகனும் தீர்மானிக்க வேண்டிய மிக முக்கிய காலகட்டம் இது.

Tags: BattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
Next Post
அரச ஆயுதங்களை மீள ஒப்படைக்குமாறு அரசியல்வாதிகளுக்கு அறிவித்தல்!

அரச ஆயுதங்களை மீள ஒப்படைக்குமாறு அரசியல்வாதிகளுக்கு அறிவித்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.