Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்டத்தில் 17சுயேட்சைக்குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 17சுயேட்சைக்குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

பொதுத்தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 17சுயேட்சைக்குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் மற்றும் ஒரு அரசியல் கட்சி இதுவரை வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.

நேற்று(07) பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தற்போது மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 சுயேட்சை குழுக்கள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளதுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும், இரண்டு சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் ஐந்து தேர்தல் விதி மீறல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் எந்தவித வன்முறைகளும் பதிவுசெய்யப்படவில்லையெனவும் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு சுயேட்சைக்குழுக்களில் மூவரும், அரசியல் கட்சிகளை சேர்ந்த செயலாளர் உட்பட நான்கு பேர் மட்டுமே வருகைதரமுடியும் எனவும் மாவட்ட செயலக வளாகத்திற்குள் ஊர்வலத்திற்கு, பேரணிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 469 686பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் 442வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க உத்தியோகத்தர்கள் செவ்வாய்க்கிழமை(08) திகதிக்கு முன்பாக தங்களது அஞ்சல் வாக்குகளிப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அலாஸ்கா அருகே 3,000 வாகனங்களுடன் பயணித்த கப்பல் தீக்கிரை
உலக செய்திகள்

அலாஸ்கா அருகே 3,000 வாகனங்களுடன் பயணித்த கப்பல் தீக்கிரை

June 6, 2025
வேனை முந்திச் செல்ல முயன்றபோது எதிர் திசையில் வந்த பேருந்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

வேனை முந்திச் செல்ல முயன்றபோது எதிர் திசையில் வந்த பேருந்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

June 6, 2025
10 ரூபாய்க்காக 5 இலட்சம் ருபாய் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி
செய்திகள்

10 ரூபாய்க்காக 5 இலட்சம் ருபாய் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி

June 6, 2025
2 ஆம் உலகப் போரில் வீசப்பட்ட 3 குண்டுகள் ஜெர்மனியில் கண்டெடுப்பு
செய்திகள்

2 ஆம் உலகப் போரில் வீசப்பட்ட 3 குண்டுகள் ஜெர்மனியில் கண்டெடுப்பு

June 6, 2025
அநுராதபுரத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது
செய்திகள்

அநுராதபுரத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

June 6, 2025
ஆறு மணிநேரம் வெளியில் வேலைசெய்யமுடியாத வெப்பநிலையைக் கொண்ட தெற்காசிய நாடுகளில் இலங்கையும் ஒன்று; உலக வங்கி
செய்திகள்

ஆறு மணிநேரம் வெளியில் வேலைசெய்யமுடியாத வெப்பநிலையைக் கொண்ட தெற்காசிய நாடுகளில் இலங்கையும் ஒன்று; உலக வங்கி

June 6, 2025
Next Post
பாலஸ்தீன யுத்தம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவு; யுத்தத்தை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் அமைதிப் பேரணி!

பாலஸ்தீன யுத்தம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவு; யுத்தத்தை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பில் அமைதிப் பேரணி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.