Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாராளுமன்றத்தில் பேரம் பேச மக்கள் ஆணை வழங்க வேண்டும்; சரவணபவன் கோரிக்கை

பாராளுமன்றத்தில் பேரம் பேச மக்கள் ஆணை வழங்க வேண்டும்; சரவணபவன் கோரிக்கை

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தமிழரசுக்கட்சி இம்முறை அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் போதுதான் பேரம் பேசும் சக்தியாக பாராளுமன்றத்தில் திகழும். அந்த பேரம் பேசும் சக்தியைக் கொடுப்பதற்கு மக்கள் அனைவரும் எமது சின்னமான வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டும். என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியி சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயரும், மாவட்ட வேட்பாளருமான தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாநகரின் முதல்வராக 5 வருடங்கள் சிறப்பான பணியினை வழங்கியிருந்தேன். மட்டக்களப்பு நகரத்துக்குள் எனக்கு கிடைத்த அதிகாரம் மாவட்டத்துக்கு விரிவுபடுத்தப்படவேண்டும் என்பதற்காகவே இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன். இத் தேர்தலில் வெற்றிபெறும் போது எமது வளங்களான விவசாயம், மீன்பிடி, கால்நடை என ஏனைய பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு எமது ஒத்துழைப்புடன் முன்னேற்றக்கூடிய வகையில் எமது திட்டங்கள் வகைப்படுத்தப்படும்.

அதே போன்று யுத்தத்தினால் கணவனை இழந்தவர்களுக்கான வழிகாட்டிச் செயற்பாடும், பெருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் வழிவகைகள் செய்து கொடுக்கப்படும். தற்சார் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை வழிமொழிந்து அதன் மூலம் வறுமையை ஒழிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கலாம். வெள்ளக் காலங்களில் வெள்ளம் ஏற்படாத வகையிலும், வரட்சி காலத்தில் வரட்சி ஏற்படாத வகையிலும் சரியான நீர்முகாமைத்துவத்தினை செய்யவேண்டும்.

தமிழரசுக்கட்சி இம்முறை அதிக ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும் அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் போதுதான் பேரம் பேசும் சக்தியாக பாராளுமன்றத்தில் திகழும், அந்த பேரம் பேசும் சக்தியைக் கொடுப்பதற்கு மக்கள் அனைவரும் எமது சின்னமான வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டும்.

இலஞ்சம் ஊழல்களில் ஈடுபடாதவர்களைத் தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறானவர்களைத் தெரிவு செய்யும் போது மிக வினைத்திறனான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யலாம். அப்போது பாராளுமன்றத்தில் வினைத்திறனான செயற்பாடுகள் நாம் மேற்கொள்ளலாம் அதன் மூலம் எமது பிரதேசம் வளர்ச்சியடையும். அந்த வளர்ச்சி மூலமாக பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடையும்.

தமிழ்த் தேசியச் சிந்தனையுடன் நாம் அனைவரும் தொடர்ச்சியாகப் பயணிக்க வேண்டும். அச் சிந்தனையில் இருக்கின்ற நாம் அனைவரும் மண்ணையும், மக்களையும் பாதுகாப்பதற்கு நாங்கள் ஒன்றிணைந்து வீட்டுக்கு வாக்களிக்க வேண்டும். அத்துடன் எனது 7ஆம் இலக்கத்திற்கும் வாக்களிக்க வேண்டும்.
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படுகின்ற தமிழ்த் தேசியத்திற்கு எதிரான எந்தவொரு செயற்பாட்டுக்கும் ஆதரவு வழங்கமாட்டோம். ஆனால் நாட்டின் நன்மைக்காக செய்யப்படும் திட்டங்களுக்கு எமது கட்சி ஆதரவு வழங்கும் என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

பெண் சுற்றுலாப்பயணிக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை; ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

பெண் சுற்றுலாப்பயணிக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளை; ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

May 13, 2025
40 உள்ளுராட்சி சபைகளில் எம்மால் ஆட்சியமைக்க முடியும்- சுதந்திரக் கட்சி
அரசியல்

40 உள்ளுராட்சி சபைகளில் எம்மால் ஆட்சியமைக்க முடியும்- சுதந்திரக் கட்சி

May 13, 2025
எனது சொத்துகளில் 99%ஐத் தானம் செய்வேன்; பில் கேட்ஸ்
செய்திகள்

எனது சொத்துகளில் 99%ஐத் தானம் செய்வேன்; பில் கேட்ஸ்

May 13, 2025
வாகரை மாங்கேணி பகுதியில் பயிர் நோய் பீடை கட்டுப்பாடு தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு
செய்திகள்

வாகரை மாங்கேணி பகுதியில் பயிர் நோய் பீடை கட்டுப்பாடு தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு

May 13, 2025
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன அழிப்பு வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு
காணொளிகள்

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன அழிப்பு வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வு

May 13, 2025
வாழைச்சேனை மீனவர்களின் வலைகளில் பிடிபடும் மீன்களை கடலில் வைத்தே கொள்ளையிட்டுசெல்லும் கொள்ளையர்கள்-வெடித்தது போராட்டம்
காணொளிகள்

வாழைச்சேனை மீனவர்களின் வலைகளில் பிடிபடும் மீன்களை கடலில் வைத்தே கொள்ளையிட்டுசெல்லும் கொள்ளையர்கள்-வெடித்தது போராட்டம்

May 13, 2025
Next Post
அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை ; அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை ; அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.