Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நபர் ஒருவரை பலமாக தாக்கி காயப்படுத்திய பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய விசாரணை

நபர் ஒருவரை பலமாக தாக்கி காயப்படுத்திய பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய விசாரணை

2 years ago
in மட்டு செய்திகள்

நபர் ஒருவரை பலமாக தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குடும்ப தகராறு காரணமாக பெண் ஒருவர் தனது கணவருக்கு எதிராக குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்நிலையில், குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இது தொடர்பான முறைப்பாட்டை பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர், பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தினால் இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என அந்த பெண் இந்த பொலிஸ் பரிசோதகரிடம் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, இந்த பொலிஸ் பரிசோதகர், பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு சென்று முறைப்பாடு அளித்த பெண்ணின் கணவரை பலமாக தாக்கியுள்ளார்.

இதன்போது, பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் உயர் அதிகாரிகள் சிலர் இணைந்து இந்த தாக்குதலை தடுத்து, பொலிஸ் பரிசோதகர் மீது முறைப்பாடளித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான அந்த பெண்ணின் கணவர் சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக நீதிமன்றில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்த பொலிஸ் பரிசோதகர் சுகயீன விடுமுறையை அறிவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், குளியாப்பிட்டிய பொலிஸ் பரிசோதகரை கைது செய்வது தொடர்பில் இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

June 5, 2026
வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு
செய்திகள்

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

June 4, 2026
கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா
காணொளிகள்

கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா

June 4, 2026
மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை
காணொளிகள்

மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

June 4, 2026
Next Post
கிழக்கு மக்கள் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு வாக்களித்தால் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்; வேட்பாளர் சரவணபவன்

கிழக்கு மக்கள் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு வாக்களித்தால் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்; வேட்பாளர் சரவணபவன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.