Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நிதி ஒதுக்கப்படவில்லை; விஜித ஹேரத்

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், கடந்த அரசாங்கம் இந்த விடயத்தில் பணம் உள்ளதா என்பதை கூட அவதானிக்கவில்லை என தெரிவித்தார்.

மேலும் அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

ஜனவரி மாதம் முதல் உதய ஆர்.செனவிரத்னவின் குழு அறிக்கையின்படி சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.பணம் கிடைக்கிறதா இல்லையா என்பதை கூட அவர்கள் கவனிக்கவில்லை.அமைச்சரவையில் முடிவெடுக்க முடியும் ஆனால் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதாவது ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. ஏப்ரல் வரையிலான நிலுவைத் தொகை அக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் என்றனர்.

நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, பொது சேவை வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகள் மற்றும் விதவை மற்றும் அனாதை ஓய்வூதிய பங்களிப்புகளை சேகரிப்பதில் திருத்தம் செய்து ஜனவரி 10, 2024 அன்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

ஜனவரி முதல் மார்ச் 2025 வரை மாதத்திற்கு 5000 ரூபாய் வீதம் 2024 ஜனவரி முதல் மார்ச் வரையிலான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு நிலுவைத் தொகையை வழங்குவது என்ன என்பது சுற்றறிக்கையில் தெளிவாக உள்ளது.

அப்போது நாட்டுக்கு ஒரு அப்பட்டமான பொய் கூறப்பட்டது. உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம், எனவே, 2025ஆம் ஆண்டு முதல் அரச சேவைக்கு சம்பள உயர்வு வழங்கப்படும், அதற்கான உத்தரவாதத்தை வழங்குவோம் என அரச ஊழியர்களிடம் தெளிவாக கூறுகின்றோம். திகதியை எம்மால் கூற முடியாது. என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அரச நிறுவனங்களில் ஊழலை குறைக்க புதிய செயற்திட்டம்!
செய்திகள்

அரச நிறுவனங்களில் ஊழலை குறைக்க புதிய செயற்திட்டம்!

May 21, 2025
ஐ.பி.எல் கிரிக்கெட் 2025 தொடரில் இன்று மும்பை – டெல்லி அணிகள் மோதல்
செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் 2025 தொடரில் இன்று மும்பை – டெல்லி அணிகள் மோதல்

May 21, 2025
இஸ்ரேலுக்கு எதிராக பிரிட்டன், கனடா, பிரான்ஸ் கூட்டாக எச்சரிக்கை
உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக பிரிட்டன், கனடா, பிரான்ஸ் கூட்டாக எச்சரிக்கை

May 21, 2025
வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 10 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு
காணொளிகள்

வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 10 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

May 21, 2025
வாழைச்சேனையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தரை இழுத்துச் சென்ற முதலை
செய்திகள்

வாழைச்சேனையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தரை இழுத்துச் சென்ற முதலை

May 21, 2025
ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்
செய்திகள்

ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்

May 21, 2025
Next Post
காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கும் ஊம்பல் மீன்கள்

காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கும் ஊம்பல் மீன்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.