Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை மாநகர சபைக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கொன்றினை, இலங்கை நீதிக்கான மையம் கல்முனை மேல் நீதிமன்றத்தில் நேற்று (29) தாக்கல் செய்துள்ளதாக நீதிக்கான மையத்தின் தலைவர் சட்டமுதுமானி ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கல்முனை மாநகர சபை பகுதியில் புதிய நீர் இணைப்புக்காக மாநகர சபையின் அனுமதி பெற்று தோண்டப்படுகின்ற கொங்கிரீட் வீதிகள் இன்னும் செப்பனிடப்படாததால் மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்குள்ளாகி வருகின்றமையை எமது மையம் சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்குமாறு கல்முனை மாநகர சபை ஆணையாளருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தது.

இதற்கு கல்முனை மாநகர சபை நிர்வாகத்தினரால் பொறுப்புணர்ச்சி யற்ற கண்துடைப்பான பதில் எமக்கு வழங்கப்பட்டது. இதனை எமது மையம் ஏற்றுக்கொள்ளாததால் இன்று மாநகர சபைக்கு எதிராக இவ்வழக்கினை தாக்கல் செய்துள்ளோம்.

இவ்வழக்கிற்கு மையத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், பிரதித் தலைவர் யூ.கே.எம்.றின்சான் ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.

புதிய நீர் மின் இணைப்பினை பெறும் விண்ணப்பதாரர்கள் கல்முனை மாநகர சபைக்கு ஏற்கனவே புதிய நீர் இணைப்புக்காக தோண்டப்படும் வீதியினை செப்பனிடுவதற்கான கட்டணத்தை செலுத்திய பின்னரே நீர் இணைப்புக்காக அனுமதியை பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லைக்குள் நீர் இணைப்பு வேலைகள் முடிவடைந்த பின்னரும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தோண்டப்பட்ட வீதிகள் மாநகர சபையினால் செப்பனிடப்படாமல் நெடுங்காலமாக காணப்படுகின்றது.

இது மாநகர சபை கட்டளை சட்டத்தினை மீறும் ஒரு செயற்பாடாகும். மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் 46 மற்றும் 47 ஆவது பிரிவின்படி, வீதிகளை நிர்மாணிப்பதும் பராமரிப்பதும் மாநகர சபையின் அடிப்படைப் பொறுப்புகளாகும். இந்த அடிப்படை கடமைகளை நிறைவேற்றத் தவறுவது, மாநகர சபையின் சேவைத் தன்மையை கடுமையான கேள்விக்குட்படுத்துகிறது.

ஒரு குறிப்பிட்ட சேவையினை வழங்கவென நிதி அறவிடப்பட்டு பின்னர் சேவையை வழங்காதிருப்பது ஒரு நிதி மோசடியாகும். மக்களிடம் அறவிடப்பட்ட நிதிக்கு என்ன நடந்துள்ளது? என சந்தேகம் எழுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீதிக்கான மையம் மாநகர சபை ஆணையாளருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் தோண்டப்பட்ட வீதிகளை செப்பனிடும் பணியை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததோடு, மாநகர சபை நடவடிக்கை எடுக்காது போனால் மாநகர சபைக்கு எதிராக ஒரு சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று அன்றே தெரிவித்திருந்தோம்-என்றார்.

Tags: BattinaathamnewskalmunainewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 500,000 இலட்சத்திற்கும் அதிக பெறுமதிகொண்ட பஞ்சவர்ணக் கிளி திருட்டு
செய்திகள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 500,000 இலட்சத்திற்கும் அதிக பெறுமதிகொண்ட பஞ்சவர்ணக் கிளி திருட்டு

June 8, 2025
மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு
காணொளிகள்

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு

June 8, 2025
செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 19 எலும்புக்கூடுகள் அடையாளம்
செய்திகள்

செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 19 எலும்புக்கூடுகள் அடையாளம்

June 8, 2025
உப்பை அதிக விலைக்கு விற்றால் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும்; கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
செய்திகள்

உப்பை அதிக விலைக்கு விற்றால் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும்; கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்

June 8, 2025
50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு
செய்திகள்

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு

June 8, 2025
தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் எலான் மஸ்க்
அரசியல்

தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் எலான் மஸ்க்

June 8, 2025
Next Post
இரு மாணவிகளுக்கு நடந்த துயரம்; கணித பாட ஆசிரியர் கைது

இரு மாணவிகளுக்கு நடந்த துயரம்; கணித பாட ஆசிரியர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.