Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“நான் டீலர் அல்ல லீடர்”; மனோ கணேசன்

“நான் டீலர் அல்ல லீடர்”; மனோ கணேசன்

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அரும்பாடுபட்டே கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வென்றெடுக்கப்பட்டது. அதனை நாம் பாதுகாக்க வேண்டும். எனவே, ஆளுமையுள்ள இளம் அரசியல் தலைவரான பாரத் அருள்சாமியை ஆதரித்து பாராளுமன்றம் அனுப்பிவையுங்கள் – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர் பாரத் அருள்சாமியை ஆதரித்து கண்டி மஹியாவ மற்றும் குயின்ஸ் விருந்தகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘கண்டியில் எமக்கு எதிராக அன்று வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டவர்கள் ஓடி ஒளிந்துக்கொண்டிருக்கின்றனர். இதனைத்தார் கர்மவினையென்பார்கள்.

நான் டீலர் அல்லர், லீடர். அதனால்தான் சவால் என தெரிந்தும் கண்டியில் களமிறங்கினேன். இன்றும் களத்தில் உள்ளேன்.

எனது கரங்கள் கறைபடியாத கரங்கள். எனவே கள்வர்கள் பட்டியலில் என்னையும் இணைக்க வேண்டாம் என அநுர தரப்பிடம் வலியுறுத்துகின்றோம்.

225 பேரும் கள்வர்கள் எனக் கூறுபவர்களும் இதனை புரிந்துகொள்ள வேண்டும். ராஜபக்ச தரப்புடன் என்னை போன்றவர்களை ஒப்பிட வேண்டாம்.

பொதுத்தேர்தல் என்பது நமக்கான தேர்தல், நமது பிரதிநிதித்துவம் என்பது மிக முக்கியம்.

ஒரு இளம் வேட்பாளராக, ஆளுமையுள்ள அரசியல்வாதியாக நாம் பாரத் அருள்சாமியை கண்டி மாவட்டத்தில் களமிறக்கியுள்ளோம்.

நாம் ஐக்கிய மக்கள் சக்தியினர் அல்ல, ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிகள்.

எனவே, எமக்கான தனித்துவமும் உள்ளது. எனவே, ரவூப் ஹக்கீம், பாரத் அருள்சாமி போன்ற தமிழ் பேசும் அரசியல்வாதிகளின் வெற்றி மிக முக்கியம்.

கண்டியில் பாரத் மற்றும் ஹக்கீமுக்கு வழங்கும் மனோவுக்கு வழங்கப்படும் வாக்குகளாக நினைத்துக்கொள்ளுங்கள்.

தம்பி பாரத் சட்டத்தரணி, அரசியல் ஆளுமை மற்றும் நிதானம் உள்ளது. கட்சி தலைமை மற்றும் கொள்கைமீது உறுதியாக உள்ளார்.” என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜ்பகஸவின் கடந்த கால ஊழல் மோசடிகளுக்கு துணை போன சாணக்கியன்; அருண் ஹேமச்சந்திரா-VIDEO
காணொளிகள்

நாமல் ராஜ்பகஸவின் கடந்த கால ஊழல் மோசடிகளுக்கு துணை போன சாணக்கியன்; அருண் ஹேமச்சந்திரா-VIDEO

June 17, 2025
மொனராகலையில் மனைவியை சுட்டுக் கொன்ற கணவர் தன்னையும் சுட்டுக் கொண்டு உயிரை மாய்ப்பு
செய்திகள்

மொனராகலையில் மனைவியை சுட்டுக் கொன்ற கணவர் தன்னையும் சுட்டுக் கொண்டு உயிரை மாய்ப்பு

June 17, 2025
ஹட்டனில் 14 மாத ஆண் குழந்தையின் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்
செய்திகள்

ஹட்டனில் 14 மாத ஆண் குழந்தையின் உடலுடன் பொதுமக்கள் போராட்டம்

June 17, 2025
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து கத்தோலிக்க திருச்சபை அதிருப்தி
செய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து கத்தோலிக்க திருச்சபை அதிருப்தி

June 17, 2025
வைத்தியசாலை உணவக சாப்பாட்டில் நத்தை – நோயாளிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு பரபரப்பு
செய்திகள்

வைத்தியசாலை உணவக சாப்பாட்டில் நத்தை – நோயாளிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு பரபரப்பு

June 17, 2025
பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்து தகவல் வழங்குமாறு அறிவுறுத்தல்
செய்திகள்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்து தகவல் வழங்குமாறு அறிவுறுத்தல்

June 17, 2025
Next Post
சாதாரண தர பரீட்சைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

சாதாரண தர பரீட்சைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.