Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மக்களுக்கு அச்சுறுத்தலான தொல்லியல் குழு கலைக்கப்பட வேண்டும்; ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

கிழக்கு மக்களுக்கு அச்சுறுத்தலான தொல்லியல் குழு கலைக்கப்பட வேண்டும்; ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் காணப்படும் இடங்களை கண்டறிவதற்கும், அவற்றை பரிபாலிக்கவும் முன்னாள் ஜனாதிபதி கோதாபாயவினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவின் தலைமையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாண புத்திஜீவிகள் ஜனாதிபதி அனுரவிடம் கோரிக்கை விடுத்துள்ளளனர்.

மேலும் அவர்கள் இதுதொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது?

கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்களின் பூர்வீக நிலங்களையும் வாழ்விடங்களையும் தொல்பொருளென வகைப்படுத்தி அவற்றை சுவீகரிக்கும் நோக்கில் இக்குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவில் இருந்த பலர் அவர்கள் நியமிக்கப்பட்டபோது இருந்த பதவிகளில் தற்போது இல்லை.

2020 ஜூனில் நிறுவப்பட்ட இந்த செயலணியில் பெரும்பான்மையானோர் பௌத்த தேரர்களாகவும் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவான அரச அதிகாரிகளும், முக்கியஸ்தர்களும் இடம்பெற்றனர்.

இந்த செயலணியினது செயற்பாடுகள் தொடர்பில், சிறுபான்மையினரிடையே பல்வேறு சந்தேகங்களும் அச்சமும் ஏற்பட்டிருந்தன.

அப்போதைய சூழ்நிலையில் சிறுபான்மை சமூக பிரதிநிதிகள் மிகக்கடுமையாக இக்குழுபற்றி விமர்சித்து, இது கலைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தபோதும் அன்றைய ஜனாதிபதியும் அரசும் இதுபற்றி எதனையும் கவனத்திலெடுக்கவில்லை.

இக்குழு அமைக்கப்பட்ட பின் திருகோணமலை, மட்டக்களப்பு பிரதேசங்களிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் இருப்புகளுக்கும் அவர்களது பூர்வீக காணிகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.

சிறுபான்மை மக்களான தமிழ், முஸ்லிம் மக்களின் குறிப்பாக கிழக்கு மாகாணத்து மக்களின் இருப்புக்கு ஆபத்தான இக்குழு உடனடியாக கலைக்கப்பட்டு வெற்றும் வெறிதுமாக ஆக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மொங்கோலியாவில் 3000-ஐ தாண்டிய தட்டம்மை பாதிப்புகள்
உலக செய்திகள்

மொங்கோலியாவில் 3000-ஐ தாண்டிய தட்டம்மை பாதிப்புகள்

May 25, 2025
முதன்முறையாக ஒரே நேரத்தில் 3,147 தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு
செய்திகள்

முதன்முறையாக ஒரே நேரத்தில் 3,147 தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

May 25, 2025
மட்டக்களப்பில் உடைந்து 2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்; பொதுமக்கள் சீற்றம்
செய்திகள்

மட்டக்களப்பில் உடைந்து 2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்; பொதுமக்கள் சீற்றம்

May 24, 2025
இலங்கை நாடாளுமன்றம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்
செய்திகள்

இலங்கை நாடாளுமன்றம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

May 24, 2025
நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்
செய்திகள்

நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

May 24, 2025
இலங்கை அரச ஊடகத்துடன் சீனா மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம்
செய்திகள்

இலங்கை அரச ஊடகத்துடன் சீனா மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தம்

May 24, 2025
Next Post
ரணிலுக்கு தெரியாமல் ரவி கருணாநாயக்கவின் பெயர் தேசியப் பட்டியலில்

ரணிலுக்கு தெரியாமல் ரவி கருணாநாயக்கவின் பெயர் தேசியப் பட்டியலில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.