Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய அரசுக்கு முஸ்லிம்கள் தொடர்பில் வித்தியாசமான எண்ணம் இருந்தால் அது களையப்பட வேண்டும்; இம்ரான் மகரூப்

புதிய அரசுக்கு முஸ்லிம்கள் தொடர்பில் வித்தியாசமான எண்ணம் இருந்தால் அது களையப்பட வேண்டும்; இம்ரான் மகரூப்

6 months ago
in செய்திகள்

இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது செயற்படுவது மிகவும் கவலையைத் தருகின்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியதாவது,

முஸ்லிம் மக்களும் இந்நாட்டின் பிரஜைகள். அந்த வகையில் இந்த சமூகமும் ஏனைய சமுகங்களைப் போன்று கௌரவத்துடன் இந்நாட்டில் வாழ விரும்புகின்றது. இந்நாட்டின் சுதந்திர காலம் தொட்டு நியமிக்கப்பட்டு வந்த அமைச்சரவையில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் இருந்து வந்துள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக இந்த அரசாங்கம் நியமித்த அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் சமூகம் மிகுந்த கவலை கொண்டுள்ளது. சமுக வலைத்தளங்களை அவதானிக்கின்ற போது இதனைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

இந்த அரசாங்கத்தின் கடந்த குறுகிய கால செயற்பாடுகள் சிலவற்றை பாரக்கும் போது முஸ்லிம்கள் தொடர்பான வித்தியாசமான எண்ணம் இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றதோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் அந்த மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட 6 தவிசாளர் பதவிகளில் எந்தவொரு முஸ்லிம் தவிசாளரும் நியமிக்கப்படவில்லை. இந்த விடயம் பேசு பொருளான பின்னர் ஒரு முஸ்லிம் தவிசாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல இந்த அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்ற 18 தேசியப்பட்டியல் ஆசனங்கள் தொடர்பான பெயர்ப் பட்டியல் முன்னர் வெளியிடப்பட்ட போது எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரதும் பெயர் வெளிவரவில்லை. பின்னர் இதுவும் பேசுபொருளான பின்னர் ஒரு முஸ்லிம் உறுப்பினரது பெயரோடு புதிய பட்டியல் வெளியானது.

அந்த வரிசையிலேயே இப்போது இந்த அரசாங்கம் நியமித்துள்ள அமைச்சரவையில் இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாது செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேசத்தை விதைத்து ஆட்சிக்கு வந்த கோத்தாபாய ராஜபக்ஸ அரசாங்கத்தின் அமைச்சரவையில் கூட முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த உதாரணங்களை வைத்து நோக்கும் போது இந்த அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் தொடர்பான வித்தியாசமான எண்ணம் இருப்பது போலவே எனக்குத் தோன்றுகின்றது. இப்படியிருந்தால் இந்த ஆரம்பத்திலேயே இது களையப்பட வேண்டும். இந்த அரசாங்கத்தோடு இணைந்திருக்கின்ற முஸ்லிம்கள் இந்தப் பணியைச் செய்ய வேண்டும்.

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் அளிக்கப்பட்டுள்ள சுமார் 15 இலட்சம் முஸ்லிம் வாக்குகளுள் சுமார் 10 இலட்சம் முஸ்லிம் வாக்குகள் திசைகாட்டிக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அளிக்கப்பட்டுள்ள வாக்கு விபரங்களை அணுகி ஆராய்கின்ற போது இந்த உண்மையை விளங்கிக் கொள்ளலாம்.

முஸ்லிம்களின் இந்தளவு பெரிய எண்ணிக்கை வாக்குகளைக் கொடுத்து உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களின் உணர்வுகளையும் புரிந்து செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெவித்தார்

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலையில் மினிவேன் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்து
செய்திகள்

திருகோணமலையில் மினிவேன் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்து

May 25, 2025
உகந்தமலை முருகன் ஆலய சூழலில் முளைத்தது புத்தர் சிலை; கதிர்காமத்தைப்போல மாற்றும் முயற்சியா?
செய்திகள்

உகந்தமலை முருகன் ஆலய சூழலில் முளைத்தது புத்தர் சிலை; கதிர்காமத்தைப்போல மாற்றும் முயற்சியா?

May 25, 2025
கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குகிறார் அதாஉல்லா
அரசியல்

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குகிறார் அதாஉல்லா

May 25, 2025
அடுத்த வாரம் தான் கைது செய்யப்படப்போவதாக தெரிவிக்கும் நாமல்
செய்திகள்

அடுத்த வாரம் தான் கைது செய்யப்படப்போவதாக தெரிவிக்கும் நாமல்

May 25, 2025
மட்டு நகர் உணவகமொன்றில் சட்டத்தரணி வாங்கிய சோற்று பார்சலுக்குள் கரட் கறியுடன் நெளிந்த புழு
செய்திகள்

மட்டு நகர் உணவகமொன்றில் சட்டத்தரணி வாங்கிய சோற்று பார்சலுக்குள் கரட் கறியுடன் நெளிந்த புழு

May 25, 2025
மொங்கோலியாவில் 3000-ஐ தாண்டிய தட்டம்மை பாதிப்புகள்
உலக செய்திகள்

மொங்கோலியாவில் 3000-ஐ தாண்டிய தட்டம்மை பாதிப்புகள்

May 25, 2025
Next Post
“ஹிஜாப் அணிய மறுப்பது மனநோய் “; ஈரான் அரசு

"ஹிஜாப் அணிய மறுப்பது மனநோய் "; ஈரான் அரசு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.