Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் போரால் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணை கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல்!

ஈரான் போரால் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணை கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல்!

51 minutes ago
in உலக செய்திகள், செய்திகள்

ஈரானுடனான ஐந்து மாத கால மோதலின் போது, துல்லியமாகத் தாக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளின் உலகளாவிய கையிருப்பில் கணிசமான பகுதியை அமெரிக்க இராணுவம் பயன்படுத்தியுள்ளதாக, இந்த விவகாரம் தொடர்பாக அறிந்துள்ள மூவர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலை, எதிர்காலத்தில் உருவாகக்கூடிய இராணுவ மோதல்களை எதிர்கொள்வதற்கான அமெரிக்காவின் தயார்நிலை குறித்து கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களில், ATACMS (Army Tactical Missile System) மற்றும் Precision Strike Missile (PrSM) உள்ளிட்ட தரையிலிருந்து தரைக்கு ஏவப்படும் நீண்ட தூர ஏவுகணைகள் முக்கிய இடம்பிடித்துள்ளன. தகவல் அறிந்த இரு தரப்பினரின் கூற்றுப்படி, இந்த வகை ஏவுகணைகளின் பெரும்பாலான கையிருப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராணுவத்திடம் தற்போது எவ்வளவு ATACMS மற்றும் PrSM ஏவுகணைகள் மீதமுள்ளன என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஒவ்வொன்றும் ஒரு மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக மதிப்புடைய இந்த ஏவுகணைகள், பாதுகாப்பான தூரத்தில் இருந்து துல்லியத் தாக்குதல் நடத்த பயன்படும் முக்கிய ஆயுதங்களாகக் கருதப்படுகின்றன.

உக்ரேன் போரிலும் ATACMS ஏவுகணைகள் முக்கிய பங்காற்றியுள்ளன. ரஷ்ய எல்லைக்குள் உள்ள இலக்குகளைத் தாக்க அமெரிக்கா வழங்கிய இந்த ஏவுகணைகள் உக்ரேன் படைகளால் பயன்படுத்தப்பட்டன. அதேவேளை, ATACMS-க்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள PrSM, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய அடுத்த தலைமுறை ஏவுகணையாகக் கருதப்படுகிறது.

நீண்ட தூர ஏவுகணைகளின் கையிருப்பு குறைந்திருப்பதால், எதிர்காலத்தில் ஈரான் மீது மீண்டும் பெரிய அளவிலான தாக்குதல்கள் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், அமெரிக்கா விமானிகள் இயக்கும் குண்டுவீச்சு நடவடிக்கைகளை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகலாம் என்றும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், அமெரிக்காவால் மீண்டும் ஆயுத கையிருப்பை நிரப்ப முடியும் என்று இந்த விவகாரம் தொடர்பாக அறிந்த மற்றொரு தரப்பு தெரிவித்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள அமெரிக்க இராணுவ களஞ்சியங்களிலிருந்து ஆயுதங்களை மீள்பகிர்வு செய்து மத்திய கிழக்கில் உள்ள படைகளுக்கு வழங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் குறித்து கருத்து கேட்டபோது, வெள்ளை மாளிகை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அறிக்கையை வெளியிட்டது. அதில், உலகின் எந்த நாட்டையும் விட அதிகளவிலான ஆயுதங்கள் அமெரிக்காவிடம் இருப்பதுடன், தேவையை விட அதிகமான கையிருப்பும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதுகாப்புத் துறையின் உற்பத்தி நிறுவனங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதுடன், தொழிற்சாலைகளின் உற்பத்தித் திறனையும் விரிவுபடுத்தி வருவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், பீரங்கி குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்ட சில ஆயுதங்களின் உற்பத்தி அதிகரித்திருந்தாலும், நீண்டகால போர் சூழ்நிலைக்குத் தேவையான அளவிற்கு கையிருப்பு போதுமானதாக இல்லாமலும் இருக்கலாம் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையில், ATACMS, PrSM மற்றும் THAAD ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை தயாரிக்கும் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனமும், டோமாஹாக் மற்றும் பேட்ரியாட் ஏவுகணைகளை தயாரிக்கும் ரேதியான் நிறுவனமும் இது தொடர்பான கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.

பென்டகனின் தலைமைப் பேச்சாளர் சீன் பார்னெல், அமெரிக்க இராணுவம் உலகின் மிக வலிமையான இராணுவமாகவே தொடர்கிறது என்றும், ஜனாதிபதி தீர்மானிக்கும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நடவடிக்கை எடுக்கத் தேவையான அனைத்து திறன்களும் அதனிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொலிஸ்மா அதிபர் குறித்து சாகர காரியவசத்தின் சர்ச்சையான கருத்து; அமைச்சர் ஆனந்த விஜேபால பிறப்பித்த உத்தரவு!
செய்திகள்

பொலிஸ்மா அதிபர் குறித்து சாகர காரியவசத்தின் சர்ச்சையான கருத்து; அமைச்சர் ஆனந்த விஜேபால பிறப்பித்த உத்தரவு!

August 5, 2026
சிறுவனிடம் முழுக் கட்டணம் வசூலித்த பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை!
செய்திகள்

சிறுவனிடம் முழுக் கட்டணம் வசூலித்த பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை!

August 5, 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!
செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!

August 5, 2026
மினுவாங்கொடையில் ரூ.50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!
செய்திகள்

மினுவாங்கொடையில் ரூ.50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

August 5, 2026
மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும்; ஜனாதிபதி
செய்திகள்

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும்; ஜனாதிபதி

August 5, 2026
இரத்மலானையில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!
செய்திகள்

இரத்மலானையில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

August 5, 2026
Next Post
சிறுவனிடம் முழுக் கட்டணம் வசூலித்த பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை!

சிறுவனிடம் முழுக் கட்டணம் வசூலித்த பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.