Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாவீரர் தினத்திற்காக ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அலுவல்கள் கூட்டம்

மாவீரர் தினத்திற்காக ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அலுவல்கள் கூட்டம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பத்தாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு வியாழக்கிழமை (21) நடைபெற்றிருந்த நிலையில் இதன்போது, முதலில் சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவுகள் இடம்பெற்றிருந்தன.

இதனையடுத்து, புதிதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயகர் அஷோக்க ரன்வெலவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். அவரைத்தொடர்ந்து மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் வாழ்த்துக்களைத் தெரிவு செய்திருந்தார்.

அவர்களைத்தொடர்ந்து சிவஞானம் சிறிதரன், நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக தமது ஆசனங்களில் இருந்து எழுந்தபோதும், நேரமின்மை காரணமாக வாழ்த்துரைகள் மட்டப்படுத்தப்பட்டன.

இதனை அவதானித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல்ரத்நாயக்க, கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்காக பிரதிநிதிகள் ஒன்றுகூடிய வேளையில் சிறிதரனிடத்தில் மன்னிப்புக்கோரியதோடு எதிர்காலத்தில் இவ்விதமான நடைபெறாது என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து நடைபெற்ற முதலாவது கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் டிசம்பர் மாதத்தில் ஆரம்பமாகவுள்ள முதலாவது பாரளுமன்ற அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதற்கான பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்தினை நடத்துவதற்கான திகதி தீர்மானிப்பதுதொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது ஆளும் தரப்பினால் 26ஆம், 27ஆம் திகதிகள் முன்மொழியப்பட்டபோது சிறிதரன் குறித்த இரண்டு திகதிகளில் மாவீரர்கள் வாரத்தின் இறுதிநாளாக இருப்பதால் பங்கெடுப்பதில் சிரமங்கள் காணப்படுவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து 28ஆம் திகதி மாலை பாராளுமன்ற அலுவல்கள் பற்றி குழுவைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், மாவீரர் வாரத்தினால் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்ற சிறிதரன் கூறியபோதும் எவ்விதமான பிரதிபலிப்புக்களையும் கட்சித்தலைவர்கள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்பு
செய்திகள்

முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்பு

July 3, 2026
தவணை முறையில் அரிசி விநியோகம் இல்லை; அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்!
செய்திகள்

தவணை முறையில் அரிசி விநியோகம் இல்லை; அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்!

July 3, 2026
இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைவு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைவு!

July 3, 2026
வெல்லவாயவில் இரண்டு லொறிகள் மோதி விபத்து; சாரதி படுகாயம்!
செய்திகள்

வெல்லவாயவில் இரண்டு லொறிகள் மோதி விபத்து; சாரதி படுகாயம்!

July 3, 2026
ஹோர்மூஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள் மீது கடும் நடவடிக்கை!
செய்திகள்

ஹோர்மூஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள் மீது கடும் நடவடிக்கை!

July 3, 2026
அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டண விபரம் வௌியானது!
செய்திகள்

அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டண விபரம் வௌியானது!

July 3, 2026
Next Post
வடக்கு தமிழ்த் தரப்புக்களுடைய தோல்விக்கு ஒற்றுமையின்மையே காரணம்; இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

வடக்கு தமிழ்த் தரப்புக்களுடைய தோல்விக்கு ஒற்றுமையின்மையே காரணம்; இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.