கிழக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள சம்பத் குமார லியனகே இன்று (17) திங்கட்கிழமை மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதற்கு முன்னர் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய சட்டத்தரணி வருண ஜெயசுந்தர, கொழும்பிலுள்ள சிறுவர் மற்றும் மகளிர் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உதவி பொலிஸ்மா அதிபராகவும் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றி வந்த சம்பத் குமார லியனகே, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவர், கிழக்கு மாகாணத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் தனது கடமைகளை முன்னெடுக்கவுள்ளார்.










