Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட தாழ் நிலப்பகுதி மக்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட தாழ் நிலப்பகுதி மக்கள்

2 years ago
in செய்திகள்

அம்பாறை மாவட்டத்தின் சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் பலத்த மழை காரணமாக தாழ் நில பிரதேசங்களில் உள்ள சில வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது.
சில நாட்கள் முன் ஆரம்பித்த பலத்த மழை இன்றும் தொடரும் நிலையில் மேலும் வெள்ளம் அதிகரிப்பதற்கான சாத்தியகூறுகள் அதிகமாக காணப்படுகின்றது.

ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று. அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்தவில், கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் இவ்வாறு மழை பெய்து வருகின்றது.

இதனால் மக்களது போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காட்டுப்பாலத்தின் கீழாக சல்வீனியா தாவரம் சூழ்ந்துள்ள நிலையில் நீர் வழிந்தோடுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

சல்வீனியா சூழ்ந்துள்ள பகுதியில் கால்நடைகள் சிக்குண்டு உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வெள்ளநீர் வழிந்தோடும் பிரதான கழிமுகப்பிரதேசமான சின்னமுகத்துவாரத்தின் ஊடாக வெள்ள நீரை வாழ்ந்தோடுவதனால்
அந்த பகுதியில் வெள்ள அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சில தனவந்தர்கள் முன்வந்து சமைத்த உணவை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடலுக்கு செல்வதை மீனவர்கள் தவிர்த்துள்ள நிலையில் நன்னீர் மீன்பிடியில், கிராமத்திற்குள்ளேயே மீனவர்கள் முன்னெடுத்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

இதேநேரம் குறிப்பிடத்தக்களவு இடப்பெயர்வுகள் இடம்பெறாதபோதும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களின் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளதுடன், பாதிப்பு தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் உதவியோடு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
செய்திகள்

ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

August 3, 2026
மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!
செய்திகள்

மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!

August 3, 2026
கேகாலை கரடுபனையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் காயம்!
செய்திகள்

கேகாலை கரடுபனையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் காயம்!

August 3, 2026
டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

August 3, 2026
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி
செய்திகள்

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி

August 3, 2026
நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கும் மண் மண்சரிவு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கும் மண் மண்சரிவு எச்சரிக்கை

August 3, 2026
Next Post
மட்டு தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவுக்கான புதிய கட்டிடம் திறந்துவைப்பு

மட்டு தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவுக்கான புதிய கட்டிடம் திறந்துவைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.