Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் 4600ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு

மட்டக்களப்பில் 4600ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரையில் 4600க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பல்வேறு போக்குவரத்து பாதைகளும் தடைப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 25ஆம் திகதி முதல் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் கடும் பாதிப்பினை எதிர்கொண்டுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நீர்பாய்ச்சல் குளங்களான உன்னிச்சை, நவகிரி, புலுக்குணாவ, உறுகாமம்,கித்துள், வாகனேரிக்குளம் உட்பட அனைத்து குளங்களினதும் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைக்கான போக்குவரத்துகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பின் ஏனைய பகுதிகளுக்கான போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்ட நிலையினை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் உள்ள வவணதீவு, பட்டிப்பளை, போரதீவுப்பற்று ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கான போக்குவரத்துகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இயந்திரப்படகு சேவைகள் ஊடாக அத்தியாவசிய போக்குவரத்துப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதேபோன்று உன்னிச்சைக்குளம் திறந்துவிடப்பட்டதன் காரணமாக மட்டக்களப்பு நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக மட்டக்களப்பு –கொழும்பு பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளதுடன் நகருக்குள் நுழையும் பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு நகரில் பிரதான பஸ் நிலையம், தனியார் பஸ் நிலையம் உட்பட மட்டக்களப்பு வாவியினை அண்டிய பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் அதனுடான போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி, சந்திவெளி, செங்கலடி உட்பட பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் சித்தாண்டியில் பிரதான வீதியுடாக வெள்ள நீர்செல்வதனால் அதன் ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டு மாற்றுவழிகள் ஊடாக போக்குவரத்துகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக 14 பிரதேச செயலகப்பிரிவுகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் சுமார் 4600 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சுமார் 1500 குடும்பங்கள் 30 இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது மழையுடனான காலநிலை ஓரளவு குறைந்துவரும் நிலையில் நிவாரணப்பணிகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலக தகவல்கள் தெரிவித்தன.

இதேநேரம் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடியோடை பாலம் உள்ள பகுதியில் வெள்ள அனர்த்தம் காரணமாக வீட்டு கூரைகளில் தஞ்சமடைந்திருந்தவர்கள் விமானப்படையின் விமானங்கள் மூலம் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டுள்ளதுடன், வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இயந்திரப்படகுகள் மூலம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு

August 7, 2026
பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!
செய்திகள்

சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!

August 7, 2026
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
Next Post
மேலும் பிற்போகும் உயர்தர பரீட்சைகள்?

மேலும் பிற்போகும் உயர்தர பரீட்சைகள்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.