Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் நீர்முகாமைத்துவம் இன்மையே அழிவுகளுக்கு காரணம்; மாவட்ட கமக்கார அதிகாரசபை

மட்டக்களப்பில் நீர்முகாமைத்துவம் இன்மையே அழிவுகளுக்கு காரணம்; மாவட்ட கமக்கார அதிகாரசபை

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் நீர்முகாமைத்துவம் தொடர்பில் எந்தவித திட்டங்களும் இல்லாதகாரணத்தினாலேயே தொடர்ச்சியான அழிவுகளை விவசாயிகள் எதிர்கொண்டுவருவதுடன் வருடந்தோறும் நீர்ப்பற்றாக்குறையினையும் எதிர்கொண்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அதிகாரசபையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அதிகாரசபையின் ஊடக சந்திப்பு நேற்று (29) மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது.

இந்தநிலையில் மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அதிகாரசபையின் உதவிச்செயலாளர் ஜெ.நிரஞ்சனகுமார் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 25ஆம் திகதி தொடக்கம் பெய்த கனமழை காரணமாக கூடுதலான வெள்ளப்பாதிப்பினை எதிர்கொண்டது.இவ்வாறான வெள்ள அனர்த்தங்கள் காரணமாக விவசாயிகள் தொடர்ச்சியான பாதிப்புகளை எதிர்கொண்டுவருகின்றார்கள்.

முதலீடுகளை செய்வதும் அது இல்லாமல்போவதும் பின்னர் நஸ்ட ஈடு என்று கூறிக்கொண்டு சிறியளவிலான தொகையே வழங்கப்படுகின்றது.ஏக்கருக்கு 2500ரூபாவே நஸ்ட ஈடாக வழங்கப்படுகின்றது. இதனைக்கொண்டு என்ன செய்யமுடியும்.

இந்த முறையாவது நியாயமான நஸ்ட ஈட்டை வழங்கவேண்டும். ஒரு மூடை உரம் 10ஆயிரம் ரூபாவாக காணப்படுகிறது. ஒரு மூடை விதை நெல் 10ஆயிரம் ரூபா முடிகின்றது. தற்போது ஒரு பயிராக வேளான்மையுள்ளது.அதற்கு சுமார் 60ஆயிரம் – 70ஆயிரம் செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு திணைக்களங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு சரியான மதிப்பீட்டை செய்து சரியான நஸ்டு ஒன்றிணை வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும்.

இந்த மாவட்டத்தில் இவ்வாறான வெள்ள நிலைமை ஏன் தொடர்ச்சியாக ஏற்படுகின்றது.இன்று உலகத்திலே நீர்ப்பிரச்சினையே பெரும் பிரச்சினையாகவுள்ளது.தண்ணீர் இல்லாமல் எத்தனையோ நாடுகள் தவிர்த்துவருகின்றது.

இந்த நாட்டில் மழை நீர் அனைத்து வீண்விரயமாக கடலில் சேர்க்க விட்டு இரண்டாம் மாதமளவில் குடிக்கநீர் இல்லாத நிலைமை இந்த மாவட்டத்தில் ஏற்படுகின்றது.இந்த நாட்டில் நீர்முகாமைத்துவம் ஒரு வீதம் கூடயில்லை. இந்த மாவட்டத்தில் நீர்முகாமைத்துவம் எதுவும் இல்லை. சிறியளவில் கூட இந்த மாவட்டத்தில் நீர்முகாமைத்துவம் இல்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சைக்குளம், நவகிரிகுளம், கித்துள்குளம் என ஒன்பது பெரிய குளங்கள் பாரிய நீர்பாசன திட்டத்தின் கீழ் மத்திய நீர்பாசன திணைக்களங்களுக்குள் உள்ளன. அதேபோன்று 13 நடுத்தர குளங்கள் மாகாண நீர்பாசன திணைக்களங்களுக்குள் உள்ளன.

இதனைவிட 480 சிறிய குளங்கள் காணப்படுகின்றன.இவை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இருக்கின்றது. இந்த 480 குளங்களையும் பராமரிக்ககூடிய கொள்ளளவு கமநல அபிவிருத்தி திணைக்களத்திடம் இல்லை.அதனால் வெள்ளநீர் வீண்போகும் நிலையே காணப்படுகின்றது.சேமிக்கும் நிலைமைகள் இல்லை.

கண்டியனாறு குளம், கித்துள் – உறுகாமம் குளங்கள் திட்டம், கற்பாறைக்குளம் போன்ற மூன்று திட்டங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறைவேற்றினால், வெள்ளப்பிரச்சினையை 75வீதம் குறைப்பதுடன் மேலும் 40ஆயிரம் ஏக்கர் காணிகளில் விவசாய நடவடிக்கையினை முன்னெடுக்கமுடிவதுடன் குடிநீர் பிரச்சினையையும் தீர்க்கமுடியும்.

ஒரு சாதாரண விவசாயிக்கு கிடைத்த விடயம் கூட இந்த அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாத நிலையிருக்கின்றது என்பது மிகவும் பாரிய கவலையான விடயமாகவுள்ளது-என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த அபிவிருத்தி செய்த நாடு இன்று வீழ்ச்சிப் பாதையில்; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
செய்திகள்

மஹிந்த அபிவிருத்தி செய்த நாடு இன்று வீழ்ச்சிப் பாதையில்; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

June 29, 2026
பொசன் பூரணையை முன்னிட்டு 7,215 தன்சல்கள் பரிசோதனை; 4 குளிர்பான தன்சல்களுக்கு தடை!
செய்திகள்

பொசன் பூரணையை முன்னிட்டு 7,215 தன்சல்கள் பரிசோதனை; 4 குளிர்பான தன்சல்களுக்கு தடை!

June 29, 2026
அமெரிக்காவுடன் எந்தச் சந்திப்பும் இல்லை; தகவல்களை ஈரான் திட்டவட்டமாக மறுப்பு!
உலக செய்திகள்

அமெரிக்காவுடன் எந்தச் சந்திப்பும் இல்லை; தகவல்களை ஈரான் திட்டவட்டமாக மறுப்பு!

June 29, 2026
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!
செய்திகள்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

June 29, 2026
இறைவரித் திணைக்கள அதிகாரி எனப் போலி அடையாளம் காட்டி பண மோசடி; ஒருவர் கைது!
செய்திகள்

இறைவரித் திணைக்கள அதிகாரி எனப் போலி அடையாளம் காட்டி பண மோசடி; ஒருவர் கைது!

June 29, 2026
பொதுமக்களின் புகார்களுக்கு நேரடி தீர்வு ; பொலிஸ் மா அதிபரிடம் தெரிவிக்கும் திட்டத்தை புதிய வடிவில்
செய்திகள்

பொதுமக்களின் புகார்களுக்கு நேரடி தீர்வு ; பொலிஸ் மா அதிபரிடம் தெரிவிக்கும் திட்டத்தை புதிய வடிவில்

June 29, 2026
Next Post
வடக்கு- கிழக்கில் இனி பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதியளிக்கக்கூடாது; விமல் வீரவன்ச

வடக்கு- கிழக்கில் இனி பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதியளிக்கக்கூடாது; விமல் வீரவன்ச

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.