Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு- கிழக்கில் இனி பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதியளிக்கக்கூடாது; விமல் வீரவன்ச

வடக்கு- கிழக்கில் இனி பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதியளிக்கக்கூடாது; விமல் வீரவன்ச

2 years ago
in செய்திகள்

“வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்கின்றார்கள். எனவே, அங்கு இனிமேல் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் அநுர அரசு அனுமதி வழங்கக்கூடாது. எமது இந்தக் கோரிக்கையை அநுர அரசு புறக்கணித்தால் அதற்கு எதிராகத் தெற்கில் நாம் மக்களை அணிதிரட்டிப் போராடுவோம்.”

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில்தான் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றார்கள். அங்கு அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் – சட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் தாம் நினைத்த மாதிரி வாழ்கின்றார்கள்.

வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்கின்றார்கள். கடந்த 27 ஆம் திகதி கடும் மழை, வெள்ள அனர்த்தங்களுக்கு மத்தியிலும் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் மாவீரர் நாள் நிகழ்வில் பங்கேற்றுள்ளார்கள். இது தெற்கில் வாழும் சிங்கள மக்களைக் கொதிப்படையச் செய்யும் நடவடிக்கையாகும்.

தமிழ் மக்களின் பார்வையில் மாவீரர்கள் யார்? அவர்கள், இலங்கை இராணுவத்துக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி மரணித்த விடுதலைப்புலிகளாவர். நாட்டை அழித்த – சிங்கள மக்களைக் கொடுமைப்படுத்திய அந்தப் பயங்கரவாதிகளை எப்படி நினைவேந்தலாம்? நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதி இல்லை.

எனவே, மாவீரர் நாள் நிகழ்வுக்கு அநுர அரசு ஏன் அனுமதி வழங்கியது? தமிழ் டயஸ்போராக்களுக்குப் பயந்து அநுர அரசு செயற்படுகின்றதா?

வடக்கு, கிழக்கில் இனிமேல் எந்தவொரு நினைவேந்தல் நிகழ்வுக்கும் அநுர அரசு அனுமதி வழங்கக்கூடாது. எமது இந்தக் கோரிக்கையை அநுர அரசு புறக்கணித்தால் அதற்கு எதிராகத் தெற்கில் நாம் மக்களை அணிதிரட்டிப் போராடுவோம்.

வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு – மாவீரர் நாள் நிகழ்வுக்கு அனுமதி வழங்குவதுதான் நல்லிணக்கம் அல்ல என்பதை அநுர அரசு புரிந்துகொள்ள வேண்டும்.” – என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த அபிவிருத்தி செய்த நாடு இன்று வீழ்ச்சிப் பாதையில்; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
செய்திகள்

மஹிந்த அபிவிருத்தி செய்த நாடு இன்று வீழ்ச்சிப் பாதையில்; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

June 29, 2026
பொசன் பூரணையை முன்னிட்டு 7,215 தன்சல்கள் பரிசோதனை; 4 குளிர்பான தன்சல்களுக்கு தடை!
செய்திகள்

பொசன் பூரணையை முன்னிட்டு 7,215 தன்சல்கள் பரிசோதனை; 4 குளிர்பான தன்சல்களுக்கு தடை!

June 29, 2026
அமெரிக்காவுடன் எந்தச் சந்திப்பும் இல்லை; தகவல்களை ஈரான் திட்டவட்டமாக மறுப்பு!
உலக செய்திகள்

அமெரிக்காவுடன் எந்தச் சந்திப்பும் இல்லை; தகவல்களை ஈரான் திட்டவட்டமாக மறுப்பு!

June 29, 2026
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!
செய்திகள்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

June 29, 2026
இறைவரித் திணைக்கள அதிகாரி எனப் போலி அடையாளம் காட்டி பண மோசடி; ஒருவர் கைது!
செய்திகள்

இறைவரித் திணைக்கள அதிகாரி எனப் போலி அடையாளம் காட்டி பண மோசடி; ஒருவர் கைது!

June 29, 2026
பொதுமக்களின் புகார்களுக்கு நேரடி தீர்வு ; பொலிஸ் மா அதிபரிடம் தெரிவிக்கும் திட்டத்தை புதிய வடிவில்
செய்திகள்

பொதுமக்களின் புகார்களுக்கு நேரடி தீர்வு ; பொலிஸ் மா அதிபரிடம் தெரிவிக்கும் திட்டத்தை புதிய வடிவில்

June 29, 2026
Next Post
வயல் நிலங்கள் சேதமடைந்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்

வயல் நிலங்கள் சேதமடைந்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.