Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரம்; ஜனாதிபதியின் பணிப்புரை

மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரம்; ஜனாதிபதியின் பணிப்புரை

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மறு அறிவித்தல் வரை எந்தவொரு அனுமதிப்பத்திரத்தையும் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மதுவரி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் பெற்றவர்களின் பட்டியலை நேற்று (04) வெளியிட்டிருந்தார்.

அந்த காலப்பகுதியில் 361 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 172 பேர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அரசியல் லஞ்சமாக வழங்கப்பட்டவை எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

இதேவேளை, மாதாந்த நிலுவைத் தொகையான 5.7 பில்லியன் ரூபாவை செலுத்தத் தவறியதன் காரணமாக, டபிள்யூ. எம். மெண்டிஸ் மற்றும் நிறுவனத்தின் மதுபான உரிமத்தை இன்று முதல் இடைநிறுத்துவதற்கு மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மேலும், நிலுவைத் தொகை மற்றும் வரியை மேலும் செலுத்தாவிட்டால், அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து மதுபான உரிமங்களும் இம்மாதம் 31ஆம் திகதி பிறகு நீட்டிக்கப்படாது என்றும் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

அத்தோடு, குறித்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமங்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி மென்டிஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நிராகரிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்து.

இவ்வாறானதொரு பின்னணியில், மறு அறிவித்தல் வரை எந்தவொரு அனுமதிப்பத்திரத்தையும் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி மதுவரி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு கிரான் பட்டியடிவெளி – வகுலாவலை தரைப்பாலம் மக்கள் பாவனைக்கு திறப்பு!
செய்திகள்

மட்டு கிரான் பட்டியடிவெளி – வகுலாவலை தரைப்பாலம் மக்கள் பாவனைக்கு திறப்பு!

August 28, 2026
கொழும்பு துறைமுகத்திற்கு உலக அரங்கில் கிடைத்துள்ள அங்கீகாரம்
செய்திகள்

கொழும்பு துறைமுகத்திற்கு உலக அரங்கில் கிடைத்துள்ள அங்கீகாரம்

August 28, 2026
மற்றுமொரு அசம்பாவித்தம் தொடர்பில் நேபாளத்திற்கு எச்சரிக்கை விடுத்த சீனா
செய்திகள்

மற்றுமொரு அசம்பாவித்தம் தொடர்பில் நேபாளத்திற்கு எச்சரிக்கை விடுத்த சீனா

August 28, 2026
“நல்லவேளை அநுர ஜனாதிபதியாக இருக்கிறார்”; லம்போகினி விவகாரத்தில் நாமல் ராஜபக்ஷ நகைச்சுவை!
செய்திகள்

“நல்லவேளை அநுர ஜனாதிபதியாக இருக்கிறார்”; லம்போகினி விவகாரத்தில் நாமல் ராஜபக்ஷ நகைச்சுவை!

August 28, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.77 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்; இரு சீனப் பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.77 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்; இரு சீனப் பெண்கள் கைது!

August 28, 2026
மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை; ஜனாதிபதி அறிவிப்பு!
செய்திகள்

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை; ஜனாதிபதி அறிவிப்பு!

August 28, 2026
Next Post
வாழைச்சேனை மியான்குளத்தில் லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு

வாழைச்சேனை மியான்குளத்தில் லொறியும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.