Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸ் அதிகாரிகளாக நடித்து பல கோடி கொள்ளை; 3 பேர் கைது

பொலிஸ் அதிகாரிகளாக நடித்து பல கோடி கொள்ளை; 3 பேர் கைது

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் எனத் தங்களைக் காட்டிக்கொண்டு, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பல பகுதிகளில் மக்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள், பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உடுநுவர, தவுலகல பகுதியைச் சேர்ந்த 40, 44 மற்றும் 45 வயதுடைய மூவரும், பொலிஸ் அல்லது CID அதிகாரிகள் எனக் கூறி தனியாகச் சென்ற நபர்களையும் வாகனங்களையும் வழிமறித்து, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சோதனை நடத்துவது போல் நடித்து, அவர்களிடமிருந்த பணம் மற்றும் தங்க நகைகளை அபகரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், வீடுகளில் சோதனை நடத்துவது போல நடித்து, அங்கிருந்தவர்களை ஒரே இடத்தில் இருக்கச் செய்து, வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகளையும் கொள்ளையடித்துள்ளனர்.

2023ஆம் ஆண்டு முதல் பேராதனை, கண்டி, கொழும்பு, கிராண்ட்பாஸ், மாவனெல்லை, நாரம்மல, பிலிமத்தலாவை, தவுலகல, கம்பளை, கலஹா, கேகாலை மற்றும் கடுகன்னாவை உள்ளிட்ட பல பொலிஸ் பிரிவுகளில் இவர்கள் இந்த மோசடி மற்றும் கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பளை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான புலனாய்வின் அடிப்படையில், முதலில் பேராதனையில் ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து, ஏனைய இருவரும் பிலிமத்தலாவையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுக்கு அடிமையாக இருந்ததுடன், கொள்ளையடித்த பணத்தை போதைப்பொருள் பயன்பாட்டிற்காகவே செலவிட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் உருக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஒரு தொகை கண்டி பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து முச்சக்கரவண்டி ஒன்று, கத்தி, போதை மாத்திரைகள் மற்றும் உருக்கப்பட்ட தங்க நகைகள் உள்ளிட்ட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மற்றுமொரு அசம்பாவித்தம் தொடர்பில் நேபாளத்திற்கு எச்சரிக்கை விடுத்த சீனா
செய்திகள்

மற்றுமொரு அசம்பாவித்தம் தொடர்பில் நேபாளத்திற்கு எச்சரிக்கை விடுத்த சீனா

August 28, 2026
“நல்லவேளை அநுர ஜனாதிபதியாக இருக்கிறார்”; லம்போகினி விவகாரத்தில் நாமல் ராஜபக்ஷ நகைச்சுவை!
செய்திகள்

“நல்லவேளை அநுர ஜனாதிபதியாக இருக்கிறார்”; லம்போகினி விவகாரத்தில் நாமல் ராஜபக்ஷ நகைச்சுவை!

August 28, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.77 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்; இரு சீனப் பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.77 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்; இரு சீனப் பெண்கள் கைது!

August 28, 2026
மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை; ஜனாதிபதி அறிவிப்பு!
செய்திகள்

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை; ஜனாதிபதி அறிவிப்பு!

August 28, 2026
நேபாளம் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் நகைகளை கொள்ளையிடும் மனிதர்கள்
உலக செய்திகள்

நேபாளம் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் நகைகளை கொள்ளையிடும் மனிதர்கள்

August 28, 2026
இந்திய பிரதமர் போட்டியில் விஜய்? கருத்துக்கணிப்பில் 9.2% ஆதரவு!
செய்திகள்

இந்திய பிரதமர் போட்டியில் விஜய்? கருத்துக்கணிப்பில் 9.2% ஆதரவு!

August 28, 2026
Next Post
நாட்டில் டெங்கு பாதிப்பு 70,000ஐ நெருங்கியது; ஒரே நாளில் 1,279 பேர் பாதிப்பு!

நாட்டில் டெங்கு பாதிப்பு 70,000ஐ நெருங்கியது; ஒரே நாளில் 1,279 பேர் பாதிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.