எம்பிலிபிட்டிய, கிரலவெல்கடுவ பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தாய் மற்றும் தந்தை உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் 26 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர்கள் 58 வயதுடைய தந்தை மற்றும் 54 வயதுடைய தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், எம்பிலிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








