Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கழிவறை குழியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமிக்கு என்ன நடந்தது?; வெளியானது பொலிசாரின் விசாரணை அறிக்கை

கழிவறை குழியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமிக்கு என்ன நடந்தது?; வெளியானது பொலிசாரின் விசாரணை அறிக்கை

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கம்பஹா, மாகவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 14 வயது சிறுமியை கொலை செய்து, நிர்மாணிக்கப்பட்டு வரும் கழிவறை குழியில் சடலத்தை வீசிய சம்பவம் தொடர்பில் பல தகவல்களை பொலிசார் வௌியிட்டுள்ளனர்.

அந்தவகையில் டிசம்பர் 5 ஆம் திகதி, 14 வயதுடைய தனது மகளை காணவில்லை என தாய் ஒருவர் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். சிறுமி காணாமல் போனமை தொடர்பில் விசாரணையை தொடங்கிய பொலிசார் கொலைக்கான மூல காரணத்தை கண்டுபிடித்தனர்.

அதன்படி முறைப்பாட்டாளரான தாய், தனது இரண்டாவது திருமணமான தனது கணவர் மற்றும் மகளுடன், மாகவிட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வேறு ஒருவருக்கு சொந்தமான மூன்று மாடி வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார்.

கணவர் கட்டுமான தொழிலும், மனைவி ஏக்கல பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2 ஆம் திகதி அன்று கணவனும் மகளும் வீட்டில் இருந்தபோது, ​​காலையில் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய பெண் தன் மகள் இல்லாதது குறித்து கணவரிடம் விசாரித்துள்ளார்.

இதன்போது, மகள் நண்பரின் குடும்ப உறுப்பினர்களுடன் சுற்றுலா சென்றிருப்பதாகவும், இன்று வரமாட்டார் மறுநாள்தான் வருவார் என்றும் கணவர் தெரிவித்துள்ளார்.

எனினும் 5ஆம் திகதிவரை மகள் வீட்டுக்கு வராததால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, சிறுமி காணாமல் போனது குறித்து அவரது கணவர் சந்தேகம் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பெண்ணின் கணவரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

2 ஆம் திகதி கணவன் அடகு வைத்த தங்க நகையை விடுவிக்க மகளிடம் பணத்தை கொடுத்துவிட்டு, அந்த தங்க நகையை விடுவிக்க தந்தையுடன் செல்லுமாறு கூறிவிட்டு மனைவி பணியிடத்திற்கு சென்றுள்ளார்.

போதைக்கு அடிமையான கணவன், மகளிடம் தங்கப் பொருட்கள் வாங்க கொடுத்த பணத்தை கேட்டு, மகள் மறுத்ததால், மகளை தாக்கி, பணத்தை பறித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

வீட்டுக்கு வந்த அவர், மகள் தாக்கப்பட்ட இடத்திலேயே இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின்னர் , சிறுமியின் சடலத்தை பொலித்தீன் பொதியொன்றில் போட்டு, கட்டி வீட்டின் கழிவறை குழியில் போட்டு மூடியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

கிடைத்த தகவலின் அடிப்படையில், கம்பஹா நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய, கழிவறை குழியில் போடப்பட்டிருந்த மகளின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்றையதினம்(6) கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி
செய்திகள்

சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி

June 6, 2025
ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை
செய்திகள்

ரி.எம்.வி.பி கட்சியின் உபதலைவர் உட்பட 3 பேரை வரவழைத்து சிஐடியினர் விசாரணை

June 6, 2025
இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு
செய்திகள்

இலங்கையில் நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உப குழு

June 6, 2025
செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி
செய்திகள்

செம்மணி மனித புதைகுழியாக பிரகடனம்; 45 நாட்கள் அகழ்வு செய்ய அனுமதி

June 6, 2025
உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு
செய்திகள்

உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு

June 6, 2025
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து; மூவர் வைத்தியசாலையில்
செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்து; மூவர் வைத்தியசாலையில்

June 6, 2025
Next Post
வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.