Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் அரிசி ஆலைகள் சோதனை; ஹம்பாந்தோட்டையில் 10 நாட்கள் சோதனை நடாத்த திட்டம்

மட்டக்களப்பில் அரிசி ஆலைகள் சோதனை; ஹம்பாந்தோட்டையில் 10 நாட்கள் சோதனை நடாத்த திட்டம்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய அரிசி ஆலைகள் சோதனைகள் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட பொருப்பதிகாரி என்.எம். சப்ராஸ் திங்கட்கிழமை (09) தெரிவித்தார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய தடையின்றி கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு அரிசி கிடைக்கும் வகையில், அரிசி ஆலைகள் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், அரிசி ஆலையில் இருப்பில் உள்ள நெல் மற்றும் அரிசி தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி தொடக்கம் நவம்பர் வரையில் 1800 மேற்பட்ட வர்த்தக நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு 961 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு, ஏறாவூர், வாகரை மற்றும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பிரதேசங்களில் இச் சுற்று வலைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விலை காட்சிப்படுத்தாமை, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல், இலத்திரனயியல் பொருட்களுக்கு கட்டுருத்து காலம் வழங்காமை, காலாவதியான பொருட்களை காட்சிப்படுத்தியமை மற்றும் விற்பனை செய்தமை , தரச்சான்றுதலுக்கு உற்படாத பொருட்களை விற்பனை செய்தமை, நிறைகுறைவானபாண் விற்பனை செய்தமை, விலையை மாற்றி அமைத்தல் மற்றும் விலையை அழித்தல் இவ்வாறான குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 9,989,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்போது மாவட்டம் முழுவதும் பண்டிகை கால பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்கள் கூடிய அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தது.

அதேசமயம் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள அரிசி ஆலைகளில் 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக சோதனைகள் நடத்தப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அரிசி ஆலைகளிலிருந்து நாளாந்தம் விநியோகிக்கப்படும் அரிசி தொகை தொடர்பில் சோதனைகளை நடத்துவதற்காக பாரிய அளவிலான அரிசி ஆலை ஒன்றுக்காக தலா 2 அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அரிசி ஆலை உரிமையாளர்களின் நாளாந்த அரிசி தொகை விநியோகம், விலை, அந்த விலையின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு அரிசி கிடைக்கின்றதா என்பன உள்ளிட்ட விடயங்களை இவர்கள் ஆராயவுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
கிளப் வசந்த கொலை வழக்கில் கைதான 8 பேரும் பிணையில் விடுதலை

கிளப் வசந்த கொலை வழக்கில் கைதான 8 பேரும் பிணையில் விடுதலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.