Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்; வெளியானது இறுதி தீர்ப்பு

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம்; வெளியானது இறுதி தீர்ப்பு

2 years ago
in செய்திகள்

அண்மையில் முடிவடைந்த 2024ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், வல்லுனர்கள் முன்வைத்த மூன்று பரிந்துரைகளில், பொருத்தமான பரிந்துரையை தேர்வு செய்து, உடனடியாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, பரீட்சை ஆணையர் நாயகத்துக்கு, நீதிவான் குழாம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வினாத்தாள்கள் வெளியானதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள், ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்க மூன்று மில்லியன் ரூபாவையும், சமிந்த குமார இளங்கசிங்க இரண்டு மில்லியன் ரூபாவையும் அரசாங்கத்திற்கு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

பரீட்சையில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தாக்கல் செய்த நான்கு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது.

ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் மூன்று கேள்விகள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதன் காரணமாக, அந்த மூன்று பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் இலவச மதிப்பெண்கள் வழங்குவதற்கான அரசாங்கத்தின் முடிவால் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்குமாறு கோரி இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்பு
செய்திகள்

முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்பு

July 3, 2026
தவணை முறையில் அரிசி விநியோகம் இல்லை; அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்!
செய்திகள்

தவணை முறையில் அரிசி விநியோகம் இல்லை; அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்!

July 3, 2026
இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைவு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைவு!

July 3, 2026
வெல்லவாயவில் இரண்டு லொறிகள் மோதி விபத்து; சாரதி படுகாயம்!
செய்திகள்

வெல்லவாயவில் இரண்டு லொறிகள் மோதி விபத்து; சாரதி படுகாயம்!

July 3, 2026
ஹோர்மூஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள் மீது கடும் நடவடிக்கை!
செய்திகள்

ஹோர்மூஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள் மீது கடும் நடவடிக்கை!

July 3, 2026
அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டண விபரம் வௌியானது!
செய்திகள்

அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டண விபரம் வௌியானது!

July 3, 2026
Next Post
அரச உத்தியோகத்தவர்களின் எண்ணிக்கை 36 வீததால் குறைக்கப்படப்போகிறதா?; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

அரச உத்தியோகத்தவர்களின் எண்ணிக்கை 36 வீததால் குறைக்கப்படப்போகிறதா?; முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.