Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 16ஆவது நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 16ஆவது நினைவேந்தல்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 16ஆவது நினைவேந்தல் மற்றும் நீதிகோரிய போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இடம்பெற்றது.

மட்டு.ஊடக அமையம்,மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.

மட்டு ஊடக அமையம்,மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியவற்றின் தலைவர் வா.கிருஸ்ணகுமாரின் ஏற்பாட்டில் சிரேஸ்ட ஊடகவியலாளர் க.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரன், பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது உயிரிழந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் உருவப்படத்துக்கு சிரேஸ்ட ஊடகவியலாளர்களான கங்காதரன் மற்றும் க.சரவணன் ஆகியோரினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தலைவர் மற்றும் கலந்துகொண்டவர்களினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன்போது படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரியும் ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (08) முன்னெடுக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியும் குற்றவாளிகளை கைதுசெய்யுமாறும் வலியுறுத்தியும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

இதன்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வவுனியாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!
செய்திகள்

வவுனியாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

June 26, 2026
உலகக் கிண்ண கால்பந்து; ஜப்பான்–சுவீடன் போட்டி சமநிலை!
செய்திகள்

உலகக் கிண்ண கால்பந்து; ஜப்பான்–சுவீடன் போட்டி சமநிலை!

June 26, 2026
ஜூலை 1 முதல் பேருந்து கட்டணம் உயர்வு; தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!
செய்திகள்

ஜூலை 1 முதல் பேருந்து கட்டணம் உயர்வு; தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

June 26, 2026
பெண் வைத்தியர் கொலை வழக்கு; பொலிஸ் உயர் அதிகாரி கைது; 3 பேருக்கு தடுப்புக் காவல்!
செய்திகள்

பெண் வைத்தியர் கொலை வழக்கு; பொலிஸ் உயர் அதிகாரி கைது; 3 பேருக்கு தடுப்புக் காவல்!

June 26, 2026
வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும்; நாமல் ராஜபக்ஷ
செய்திகள்

வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும்; நாமல் ராஜபக்ஷ

June 26, 2026
வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்வு!
செய்திகள்

வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்வு!

June 26, 2026
Next Post
இத்தாலியில் வசிக்கும் பெண்ணின் வீட்டில் மோசடி; 6 பேர் கைது

இத்தாலியில் வசிக்கும் பெண்ணின் வீட்டில் மோசடி; 6 பேர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.