Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் ஏனைய விவசாயிகளுக்கு எப்போது மானியம் வழங்கப்படும்; எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

இலங்கையில் ஏனைய விவசாயிகளுக்கு எப்போது மானியம் வழங்கப்படும்; எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

5 months ago
in செய்திகள்

இலங்கையில் உர மானியத்துக்கு உரித்துடைய ஏனைய விவசாயிகளுக்கு எப்போது மானியம் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து அரசாங்கத்திற்கு இந்தப் பிரச்சினைகளை முன்வைக்கும் நடவடிக்கைகள் நிமித்தம் சஜித் பிரேமதாச நேற்று (10) இவ்வாறு இந்த பிரச்சினையை முன்வைத்து கருத்துத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் கூற்றுப்படி 9,96,992 விவசாயிகள் உர மானியத்திற்கு உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர். இவர்களுக்கு உர மானியமாக 15,000 ரூபா, 10,000 ரூபா என 2 கட்டமாக மொத்தம் 25,000 ரூபா வழங்கப்படவுள்ளன.

இதுவரை 684,194 விவசாயிகள் 15,000 ரூபா மானியத்தைப் பெற்றுள்ளனர். அதாவது 69% ஆனோருக்கு இது கிடைத்துள்ளது. 31% ஆனோருக்கு அதாவது 312,798 பேருக்கு இது இன்னும் கிடைக்கவில்லை.

15,000 ரூபா மானியத்திற்கு உரித்துடைய ஏனைய 312,798 விவசாயிகளுக்கு எப்போது இந்த மானியம் வழங்கப்படும்? அவ்வாறு மானியம் வழங்கப்படும் திகதியை அறிந்து கொள்ள விரும்புகிறோம்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற வகையிலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அரசாங்கத்திடம் முன்வைப்பது எனது பொறுப்பாகும்.

314,956 விவசாயிகளுக்கு அதாவது 32% ஆனோருக்கு மட்டுமே 10,000 ரூபா மானியம் கிடைத்துள்ளது. 682,041 விவசாயிகளுக்கு அதாவது 68% ஆனோருக்கு இன்னும் கிடைக்கவில்லை.

10,000 ரூபா மானியத்தை எஞ்சிய 682,041 போருக்கும் வழங்கும் திகதியை அறிய விரும்புகின்றோம்.

இந்த 25,000 ரூபா மானியத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு 24.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 9.9 பில்லியன் ரூபா அதாவது 40% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே முழுத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பிரேசில் கால்பந்து வீரருக்கு கோவிட் தொற்று உறுதி
உலக செய்திகள்

பிரேசில் கால்பந்து வீரருக்கு கோவிட் தொற்று உறுதி

June 10, 2025
யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கிலம்
செய்திகள்

யாழில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கிலம்

June 9, 2025
கண்டியைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்
செய்திகள்

கண்டியைச் சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்

June 9, 2025
நேற்று முதல் இன்று வரை 479 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்
உலக செய்திகள்

நேற்று முதல் இன்று வரை 479 ட்ரோன்கள் மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

June 9, 2025
கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் தீப்பரவல்
செய்திகள்

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்றுக்கொண்டிருந்த கொள்கலன் கப்பலில் தீப்பரவல்

June 9, 2025
வீரகெடிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு
செய்திகள்

வீரகெடிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 110 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு

June 9, 2025
Next Post
மாலைத்தீவு துறைமுக அதிகாரசபை வடக்கு பிராந்தியத்தில் துறைமுக திட்டத்தை அபிவிருத்தி செய்வதில் ஆர்வம்

மாலைத்தீவு துறைமுக அதிகாரசபை வடக்கு பிராந்தியத்தில் துறைமுக திட்டத்தை அபிவிருத்தி செய்வதில் ஆர்வம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.