Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஐந்து கோடி ரூபாய் மற்றும் ஏழரை கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்தியவர்களுக்கு கூட மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி ரூபாய் தண்டப்பணம் செலுத்திய ஒருவருக்கும் தண்டனை கிடைக்காமல் போகும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கருத்து தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 269 அப்பாவி மக்கள் உயிரிழந்ததுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டிய அவர், பாதுகாப்பு பொறுப்பில் இருந்தவர்கள் தமது கடமையை சரியாக நிறைவேற்றத் தவறியதன் காரணமாகவே இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

அதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், இதனுடன் தொடர்புடைய ஏனைய தரப்பினருக்கும் கலக்கம் ஏற்பட்டிருக்கும் என அவர் கூறினார்.

“ஐந்து கோடி ரூபாய் செலுத்தியவருக்கும், ஏழரை கோடி ரூபாய் செலுத்தியவருக்கும் இவ்வாறான தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி ரூபாய் செலுத்திய ஒருவருக்கும் தண்டனை கிடைக்காமல் போகும் வாய்ப்பு குறைவு என அவர்கள் சிந்திப்பார்கள்” என ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் செயற்பட்டதாக கூறப்படும் நபர்கள் தொடர்பிலும் விசாரணைகள் தொடர வேண்டுமென தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி ஒருவரை குறிப்பிட்டு, “ஏனையவர்களுக்கு இவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமக்கும் இதுபோன்ற நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தில் அவருக்கு தற்போது காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம்” என தனது கருத்தை வெளியிட்டார்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை
செய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

August 2, 2026
கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை
செய்திகள்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை

August 2, 2026
யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
செய்திகள்

யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

August 2, 2026
மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது
செய்திகள்

மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது

August 2, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.