Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டின் திறந்த சந்தைகளில் கருவாடுகளின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஒரு கிலோ கருவாட்டின் சில்லறை விலை பல இடங்களில் 3,000 ரூபாயைத் தாண்டியுள்ளதுடன், சில வகை உயர்தர கருவாடுகள் 4,000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

குறிப்பாக தோரா, சுறா, கீளான், பலயா மற்றும் இறால் கருவாடுகளின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலர் நெத்தலி ஒரு கிலோவின் விலையும் சுமார் 2,000 ரூபாயை அண்மித்துள்ளது.

சந்தை நிலவரங்களின் அடிப்படையில், ஒரு கிலோ தோரா கருவாடு 3,200 முதல் 4,000 ரூபாய் வரையிலும், சுறா கருவாடு 2,500 முதல் 3,200 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டமை, கடல்சார் காலநிலை மாற்றங்கள் மற்றும் எரிபொருள் செலவுகள் அதிகரித்தமை உள்ளிட்ட காரணங்களால் புதிய மீன்களின் விலைகளும் உயர்ந்துள்ளதாகவும், அதன் தாக்கமே கருவாடு சந்தையிலும் பிரதிபலித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, கீளான் கருவாடு ஒரு கிலோ சுமார் 2,900 ரூபாய்க்கும், மடு மீன் 2,000 ரூபாய்க்கும், பலயா 1,900 ரூபாய்க்கும், இறால் 2,000 ரூபாய்க்கும், அங்கூளு 1,950 ரூபாய்க்கும், நெத்தலி 1,700 ரூபாய்க்கும், உம்புலக்கடை 2,600 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

கருவாடு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், விலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது
செய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது

August 2, 2026
இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை
செய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை
செய்திகள்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை

August 2, 2026
யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
செய்திகள்

யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

August 2, 2026
Next Post
யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.