Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு சம்பவம்; விசாரணையை நடத்துமாறு திருச்சபை கோரிக்கை

கொழும்பு பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு சம்பவம்; விசாரணையை நடத்துமாறு திருச்சபை கோரிக்கை

5 months ago
in செய்திகள்

கொழும்பு பொரள்ளையில் அமைந்துள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற வெடிகுண்டு சம்பவம் குறித்து புதிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு இலங்கை கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

2022 ஜனவரி 11 அன்று தேவாலயத்திற்குள் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நேற்று(12) காலை போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக தேவாலயத்தின் பராமரிப்பாளர் அப்போது கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

எனினும் இந்தச் செயல்களால் அவர் துன்புறுத்தப்பட்டதாகவும் அவரது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் திருச்சபை பின்னர் குற்றம் சுமத்தியிருந்தது.

இந்தநிலையில் நேற்று (12) இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த தேசிய கத்தோலிக்க தகவல் தொடர்பு இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த, இந்த சம்பவம் குறித்து புதிய விசாரணை நடத்துமாறு, தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம், திருச்சபை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியின் போது ஒரு சந்தேகநபர் பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சந்தேகநபர் குறித்து தற்போதைய அரசாங்கம் என்ன செய்யும் என்பதைப் பார்க்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த விடயத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியவை என்றும் அருட்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்வத்தின் பின்னர், மாலையில் பதிவான சிசிடிவி காட்சிகளை மட்டுமே பார்க்க வேண்டும் என்று தென்னகோன் அறிவுறுத்தியிருந்தார்.

எனினும் காலையில் பதிவான மற்றொரு காணொளியில், குற்றவாளி,தேவாலயத்திற்குள் வெடிகுண்டை வைப்பது கண்டறியப்பட்டது என்று அருட்தந்தை ஜூட் கிரிசாந்த தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளராக மே.வினோராஜ் மற்றும் உப தவிசாளராக அ.வசிகரன் தெரிவு
அரசியல்

தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளராக மே.வினோராஜ் மற்றும் உப தவிசாளராக அ.வசிகரன் தெரிவு

June 12, 2025
மின்சாரக் கட்டண அதிகரிப்பு நீர் கட்டணத்தில் தாக்கம் செலுத்தாது; அமைச்சர் அனுர கருணாதிலக்க
செய்திகள்

மின்சாரக் கட்டண அதிகரிப்பு நீர் கட்டணத்தில் தாக்கம் செலுத்தாது; அமைச்சர் அனுர கருணாதிலக்க

June 12, 2025
முல்லைத்தீவில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்
செய்திகள்

முல்லைத்தீவில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்

June 12, 2025
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு
செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு

June 12, 2025
சட்டவிரோத துப்பாக்கிச்சூட்டு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டதாக முன்னாள் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரி வாக்குமூலம்
செய்திகள்

சட்டவிரோத துப்பாக்கிச்சூட்டு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டதாக முன்னாள் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரி வாக்குமூலம்

June 12, 2025
அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 110 பேரின் உடல்கள் மீட்பு; குஜராத்தின் முன்னாள் முதலமைச்சரும் விமானத்தில் இருந்ததாக தகவல்
உலக செய்திகள்

அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 110 பேரின் உடல்கள் மீட்பு; குஜராத்தின் முன்னாள் முதலமைச்சரும் விமானத்தில் இருந்ததாக தகவல்

June 12, 2025
Next Post
குருக்கள் மடம் கிருஷ்ணன் ஆலயத்தில் திருப்பாவை தீர்த்தோற்சவ நிகழ்வு

குருக்கள் மடம் கிருஷ்ணன் ஆலயத்தில் திருப்பாவை தீர்த்தோற்சவ நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.