Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு வாவியில் சட்ட விரோத மீன் பிடி; அரசை நடவடிக்கையெடுக்க கோரும் மீனவர் சங்கம்

மட்டு வாவியில் சட்ட விரோத மீன் பிடி; அரசை நடவடிக்கையெடுக்க கோரும் மீனவர் சங்கம்

5 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கையில் மிக நீளமான வாவிகளில் ஒன்றாகவும் அதிகளவில் மீன்பிடியார்களைக்கொண்ட வாவிகளில் ஒன்றாகவும் காணப்படும் மட்டக்களப்பு வாவியில் சட்ட விரோத மீன்பிடிகளினால் மீன் இனங்கள் அழிந்து செல்வதை தடுப்பதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மீன்பிடி சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

மட்டக்களப்பு வாவியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீரியல்வள திணைக்கள பிரதிப்பணிப்பாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் மாவட்ட கடற்தொழில் நீரியல்வள திணைக்கள ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு வாவியில் மீன்பிடியில் ஈடுபடும் பல்வேறு மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மட்டக்களப்பு முகத்துவாரத்தில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர் சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தின்போது மட்டக்களப்பு வாவியில் நடைபெறும் சட்ட விரோத மீன்பிடிகள் தொடர்பில் மீனவர்கள் சங்கத்தினால் பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

தடைசெய்யப்பட்ட வலைகள் மட்டக்களப்பு வாவிக்குள் பயன்படுத்தப்படுவதன் காரணமாக மீன்கள் அழியும் நிலையேற்படுவதுடன் வாவியின் ஓரங்களில் காணப்படும் கன்னாதாவரங்களும் அழிக்கப்படுவதனால் மீன் இனங்கள் உற்பத்திகள் தடுக்கப்படுவதாகவும் இங்கு மீனவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு வாவி ஓரங்களை சிலர் நிரப்பி ஹோட்டல்கள் மற்றும் வீடுகளை அமைப்பதன் காரணமாகவும் சில இடங்களில் வீதிகளை அமைப்பதற்கு வாவிகளை நிரப்புவதன் காரணமாகவும் மீன்கள் அழிவடையும் நிலைமை காணப்படுவதாகவும் மீனவர் சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகள் பாவிக்கப்படுவதனால் சிறிய மீன்கள் பிடிக்கப்படுவதனால் மீன்கள் பெருக்கம் குறைவதாகவும் மீனவர்களினால் தெரிவிக்கப்பட்டதுடன் இவை காரணமாக வாவியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் எதிர்கால சமூகத்திற்கு சத்துள்ள மீன்களை வழங்குவதும் தடுக்கப்படுவதாகவும் இவற்றினை தடுத்து மீன் இணங்களை பாதுகாத்து எதிர்கால சமூகத்தற்கு வழங்கும் பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

தங்களது அதிகாரத்திற்கு உட்பட்ட வகையிலான அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் எதிர்காலத்தில் மீனவர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் சட்ட விரோத மீன்பிடியை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இங்கு மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் நீரியல்வள திணைக்கள பிரதிப்பணிப்பாளர் குரூஸ் மீனவர் அமைப்புகளிடம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மீன்பிடித்துறை அமைச்சரின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டுசென்றுள்ளதாகவும் விரைவில் அமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்து மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயவுள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கையெடுக்கும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது நம்பிக்கைவெளியிட்டார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு பட்டிப்பளை பிரதேச சபையினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து சுயேட்சைக்குழு கைப்பற்றியது
அரசியல்

மட்டு பட்டிப்பளை பிரதேச சபையினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து சுயேட்சைக்குழு கைப்பற்றியது

June 13, 2025
பொத்துவில் வரையான கடலோரப் பகுதி மீனவர்களுக்கு பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை
செய்திகள்

பொத்துவில் வரையான கடலோரப் பகுதி மீனவர்களுக்கு பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

June 13, 2025
நுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்றாவது பிறப்பாக்கி செயலிழப்பு; மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை என மின்சார சபை உறுதி
செய்திகள்

நுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்றாவது பிறப்பாக்கி செயலிழப்பு; மின் விநியோகத்தில் பாதிப்பு இல்லை என மின்சார சபை உறுதி

June 13, 2025
பயணித்துக்கொண்டிருந்த பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் பாடசாலை மாணவி உட்பட இருவர் காயம்
செய்திகள்

பயணித்துக்கொண்டிருந்த பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் பாடசாலை மாணவி உட்பட இருவர் காயம்

June 13, 2025
ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம்
செய்திகள்

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம்

June 13, 2025
மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு; கார் தீக்கிரை
செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு; கார் தீக்கிரை

June 13, 2025
Next Post
இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.