Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
33 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

33 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் நேற்றும் இன்றும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது, ​​இலங்கை கடற்படை மற்றும் கடலோர பொலிஸார், சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 33 இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளனர்.

இதன்போது, 03 இந்திய கடற்றொழில் படகுகளும் பறிமுதல் செய்ய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டு கடற்றொழில் படகுகளின் சட்டவிரோத கடற்றொழில் நடைமுறைகளைத் தடுக்க, இலங்கை கடல் எல்லையில் கடற்படை மற்றும் கடலோர பொலிஸார் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நடைமுறைகள் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை அடிப்படையாக கொண்டும் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையில், நேற்று (25) இரவு மற்றும் இன்று (26) அதிகாலையில் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோத கடற்றொழில் ஈடுபட்ட இந்திய கடற்றொழில் படகுகளை வட மத்திய கடற்படை கட்டளை அதிகாரிகள் பிடித்துள்ளனர்.

வடக்கு கடற்படை கட்டளை மற்றும் கடலோர பொலிஸார் தங்கள் விரைவுத் தாக்குதல் படகையும், வட மத்திய கடற்படை கட்டளையின் கரையோர ரோந்து படகையும் அனுப்பி தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் கடற்றொழில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்திய கடற்றொழில் படகுகளை சுற்றி வளைத்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் விளைவாக 03 இந்திய கடற்றொழில் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இலங்கை கடல் எல்லையில் தொடர்ந்து தங்கியிருந்த 33 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் (03) மற்றும் இந்திய கடற்றொழிலாளர்கள் (33) இரணைதீவுக்கு கொண்டு வரப்பட்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்வள உதவி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள்

சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.