யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்தப் பகுதியில் கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரின் கட்டுப்பாடுகள் காணப்பட்டதால், கண்டெடுக்கப்பட்ட எச்சங்களுடன் தொடர்புடைய சம்பவங்களின் பின்னணியையும் பொறுப்புக்கூற வேண்டியவர்களையும் கண்டறிவது சிக்கலான விசாரணையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மரணத்திற்கான காரணங்களை உறுதிப்படுத்துவதற்காக தடயவியல் ஆய்வுகள் மற்றும் DNA பரிசோதனைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவை இயற்கையான மரணங்களா அல்லது ஏதேனும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவையா என்பதை உறுதி செய்வதே விசாரணைகளின் முக்கிய நோக்கமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், குற்றவாளிகளை அடையாளம் காணும் கட்டத்தை விசாரணைகள் இன்னும் எட்டவில்லை என நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.








