தமிழ் சின்னத்திரை மற்றும் திரைப்படத் துறையில் குணச்சித்திர நடிகராக தனக்கென தனி இடத்தைப் பிடித்திருந்த V.C. ஜெயமணி (76), திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘திருமதி செல்வம்’, ‘சிறகடிக்க ஆசை’ உள்ளிட்ட பல பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்த அவர், திரைப்படங்களிலும் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
‘முஸ்தபா’, ‘லக்கி மேன்’, ‘சிங்கம்’ உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஜெயமணி, 40-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களை இயக்கிய அனுபவமும் கொண்டவர்.

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் டப்பிங் யூனியனிலும் உறுப்பினராக செயற்பட்டு வந்த அவர், கலைத்துறையில் நீண்டகால சேவையை ஆற்றியுள்ளார்.
அவரது மறைவுக்கு சின்னத்திரை மற்றும் திரைப்பட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் ஊடாக தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.








