Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு உட்பட பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

கிழக்கு உட்பட பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டின் தென் அரைப் பிராந்தியத்தில் வானம் முகில் நிறைந்து காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, காலி ஊடாக கொழும்பு வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 – 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நேரில் கண்டறிந்த ஜீவன் எம்.பி!
செய்திகள்

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நேரில் கண்டறிந்த ஜீவன் எம்.பி!

August 13, 2026
ஹிஸ்புல்லாஹ் எம்.பி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!
செய்திகள்

ஹிஸ்புல்லாஹ் எம்.பி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

August 13, 2026
ஜப்பானில் 21 வயது இலங்கை இளைஞர் கொலை; சக இலங்கையர் கைது!
செய்திகள்

ஜப்பானில் 21 வயது இலங்கை இளைஞர் கொலை; சக இலங்கையர் கைது!

August 13, 2026
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் பதவியேற்பு!
செய்திகள்

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் பதவியேற்பு!

August 13, 2026
இளைஞர்களிடையே அதிகரிக்கும் குடல் நோய்கள்; உணவுப் பழக்கமே முக்கிய காரணம்!
செய்திகள்

இளைஞர்களிடையே அதிகரிக்கும் குடல் நோய்கள்; உணவுப் பழக்கமே முக்கிய காரணம்!

August 13, 2026
நாட்டில் டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு; 91,059 பேர் பாதிப்பு!
செய்திகள்

நாட்டில் டெங்கு மரணங்கள் 68 ஆக உயர்வு; 91,059 பேர் பாதிப்பு!

August 13, 2026
Next Post
சுவிட்சர்லாந்தில் பெப்ரவரி 1ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ள மாற்றங்கள்

சுவிட்சர்லாந்தில் பெப்ரவரி 1ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ள மாற்றங்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.