Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழீழம் என்ற இலக்கை அடையும்வரை போராடுவோம்; சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடிகளைப் பறக்கவிடுமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல்!

தமிழீழம் என்ற இலக்கை அடையும்வரை போராடுவோம்; சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடிகளைப் பறக்கவிடுமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல்!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சிங்கள தேசத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தேசம் விடுதலை அடையும் நாளே தமிழர்களின், தமிழர் தேசத்தின் சுதந்திர நாள். தமிழீழம் என்ற இலக்கை அடையும்வரை தொடர்ந்து போராடுவோம் எனவும் இனப்படுகொலைக்கு முழுமையாக ஒத்துழைத்து தமிழர்களை, தமிழர் தேசத்தை அழித்து ஆக்கிரமித்தவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

1948, பெப்ரவரி 4 இல் இருந்து சிறிலங்கா தனது சுதந்திர நாளாகக் கொண்டாடிவருகின்றது ஆனால் அன்றைய நாள் ஆங்கிலேயரால் பறிக்கப்பட்ட தமிழர்களின் இறையாண்மை சிங்கள இனவாதப் பூதத்திற்கு தரைவார்க்கப்பட்ட நாளாகும்.

சிங்கள தேசத்தில் ஆட்சி மாறினாலும் பேரினவாத மூலோபாயத்தில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை. மாறாக சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்படவோ, நிறுத்தப்படவோ அல்லது பெளத்த மயமாக்கல் அகற்றப்படப் போவதில்லை,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிவழங்கவோ, போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ எந்தவாய்ப்பும் இல்லை.

இனப்படுகொலைக்கு முழுமையாக ஒத்துழைத்து தமிழர்களை, தமிழர் தேசத்தை அழித்து ஆக்கிரமித்தவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது.

காலங்காலமாக தமிழர்தேசம் இந்நாளை கரிநாளாக பிரகடனப்படுத்தி சிங்கள தேசத்திற்கெதிராகப் போராடிவருவது போல், இம்முறையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வடகிழக்கில் போராட்டங்களுக்கான அறைகூவலை விடுத்துள்ளனர்.

தமிழர் தாயகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி, பாடசாலை மாணவர்கள், சிவில் சமூகத்தினர், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிநிகள், வர்த்தக சங்கத்தினர் மற்றும் அனைவரும் கறுப்புப் பட்டிகள் அணிந்தும், கறுப்புக் கொடிகளை ஏந்தியும், வர்த்தக நிலையங்கள், பொது இடங்கள், பல்கலைக்கழகம், கல்லூரி, பாடசாலைகள் அனைத்திலும் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டும் தமது எதிப்பைத் தெரிவுப்பதுடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின், தாய்மாரின் எதிர்ப்புப் போராட்டத்தில் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உரிமையுடன் அழைப்பு விடுக்கின்றது.

மேலும் புலம்பெயர் தேசங்களில் சிறிலங்கா சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டத்திற்கு பல்வேறுபட்ட அமைப்புக்கள் விடுத்த அழைப்பிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையைத் தெரிவித்துக் கொள்வதுடன்,

புலம் பெயர் தமிழர்கள் கறுப்புப்பட்டி அணிந்தும், தமிழர் வணிக நிலையங்களில் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டு எமது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

அத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இளையோரின் இணையவழி கண்டன எதிப்பு கருத்தாடல் நிகழ்வு பெப்ரவரி 4 இல் ஏற்பாடு செய்துள்ளது. இதில் ஐரோப்பிய, கனேடிய இளையோர் பங்கு பற்றுவது குறிப்பிடத்தக்கது.

சிங்கள தேசத்தால் ஆக்கிமிக்கப்பட்ட தமிழர் தேசம் விடுதலை அடையும் நாளே தமிழர்களின், தமிழர் தேசத்தின் சுதந்திர நாள். தமிழீழம் என்ற இலக்கை அடையும்வரை தொடர்ந்து போராடுவோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

10 ரூபாய்க்காக 5 இலட்சம் ருபாய் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி
செய்திகள்

10 ரூபாய்க்காக 5 இலட்சம் ருபாய் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி

June 6, 2025
2 ஆம் உலகப் போரில் வீசப்பட்ட 3 குண்டுகள் ஜெர்மனியில் கண்டெடுப்பு
செய்திகள்

2 ஆம் உலகப் போரில் வீசப்பட்ட 3 குண்டுகள் ஜெர்மனியில் கண்டெடுப்பு

June 6, 2025
அநுராதபுரத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது
செய்திகள்

அநுராதபுரத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

June 6, 2025
ஆறு மணிநேரம் வெளியில் வேலைசெய்யமுடியாத வெப்பநிலையைக் கொண்ட தெற்காசிய நாடுகளில் இலங்கையும் ஒன்று; உலக வங்கி
செய்திகள்

ஆறு மணிநேரம் வெளியில் வேலைசெய்யமுடியாத வெப்பநிலையைக் கொண்ட தெற்காசிய நாடுகளில் இலங்கையும் ஒன்று; உலக வங்கி

June 6, 2025
குருந்தூர் மலையில் கைதாகிய விவசாயிகளை விடுவிக்க உத்தரவு
செய்திகள்

குருந்தூர் மலையில் கைதாகிய விவசாயிகளை விடுவிக்க உத்தரவு

June 6, 2025
அரசியல் கட்சிகளுக்குரிய நிதி எங்கிருந்து வருகின்றதென்பது தொடர்பில் விசாரணை வேண்டும்; கோடீஸ்வரன் எம்.பி
செய்திகள்

அரசியல் கட்சிகளுக்குரிய நிதி எங்கிருந்து வருகின்றதென்பது தொடர்பில் விசாரணை வேண்டும்; கோடீஸ்வரன் எம்.பி

June 6, 2025
Next Post
15,000 தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் தேசிய வேலைத்திட்டம் மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம்

15,000 தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் தேசிய வேலைத்திட்டம் மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.