22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான சமர்ப்பணங்கள் குறித்து விளக்கமளிப்பதற்காக சுதந்திர செயற்பாட்டு மையத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று கோட்டை கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்கர் கலாநிதி இத்தேபானே தம்மாஸங்கார தேரரை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
இந்த சந்திப்பு இன்று (16) பன்னிப்பிட்டிய, ருக்மலேயில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாரையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மூன்று மகாநாயக்க தேரர்களுடனும் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை ஜனாதிபதிக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகாநாயக்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த விடயம் தொடர்பில் தாம் தனிப்பட்ட முறையிலும் ஜனாதிபதியிடம் கருத்துக்களை முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.








