ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்மாந்துறை சுற்றுச்சூழல் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றை தொடர்ந்து அம்பாறை மாவட்ட, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டக்களப்பு தரவை பகுதியில் உள்ள வீடு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை(2) அன்று சோதனையிட்ட போது 770 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 37 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேக நபர் உட்பட சான்றுப் பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.