Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரியந்த ஜயதிலக கைது

பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரியந்த ஜயதிலக கைது

2 years ago
in செய்திகள்

முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் ஒருங்கிணைப்பு செயலாளராக பணியாற்றி தவலம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பிரியந்த ஜயதிலக கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி ஹினிதும மஹாபோதிவத்த பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் நடந்த மூன்று கொலைகள் தொடர்பிலேயே சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 30 அன்று இரவு 11.15 மணியளவில் நடந்த இந்த தாக்குதலில், விடுதியின் உரிமையாளர் மற்றும் 34, 39ஆகிய இருவர் கொலைசெய்யப்பட்டிருந்தனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பான நிதி பரிவர்த்தனை இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட விடுதியின் உரிமையாளர் மற்றும் ஏனைய இருவரும் முறையே 1.5 மில்லியன் மற்றும்1.3 மில்லியன் ரூபா பணத்தை வெளிநாடு செல்லும் நோக்கத்தோடு, பிரியந்த ஜெயதிலகவுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி இந்தத் தாக்குதலின் போது, ​​டி-56 துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்குதலை மேற்கொண்டதாகவும்,சம்பவம் நடந்த இடத்திலிருந்து 28 டி-56 தோட்டா உறைகளை பொலிஸார் மீட்டதாகவும் கூறப்படுகிறது.

கரந்தெனிய சுத்தா என்ற வெளிநாட்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உத்தரவின் பேரில் நெவில் என்ற நபரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட திசாரா விருந்தினர் மாளிகையின் உரிமையாளர் இந்துனில் சமன் குமார மற்றும் கைது செய்யப்பட்ட பிரியந்த ஜெயதிலக இருவரும் முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் நெருங்கிய கூட்டாளிகள் என்பதும் தெரியவந்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
சுமார் 56 வருங்களுக்கு பின்னர் இலங்கையில் நடக்கும் குத்துச்சண்டை

சுமார் 56 வருங்களுக்கு பின்னர் இலங்கையில் நடக்கும் குத்துச்சண்டை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.