Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மின் துண்டிப்பு தொடர்பில் அநுர அரசை கடுமையாக சாடும் ஐக்கிய மக்கள் சக்தி

மின் துண்டிப்பு தொடர்பில் அநுர அரசை கடுமையாக சாடும் ஐக்கிய மக்கள் சக்தி

4 months ago
in செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற பாரிய அசம்பாவிதத்தின் போது கூட, நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு ஏற்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி அநுர அரசை கடுமையாக சாடியுள்ளது.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்ட மின்தடைக்கு மின்சக்தி அமைச்சர் குரங்குகள் மீது பழி சுமத்தினார். ஒரு குரங்கால் முழு நாட்டுக்கும் மின் துண்டிப்பை ஏற்படுத்த முடியுமா?

அமைச்சரால் குறிப்பிடப்பட்ட இந்த கருத்து பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பின்னர் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளே இதற்கு காரணம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கங்களின் குறைக் கூறியே இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தற்போது ஆட்சியிலிருந்து கொண்டும் இதனையே கூறுகின்றனர்.

முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்தியதாகக் கூறியவர்களின் இயலாமை தற்போது வெளிப்பட ஆரம்பித்துள்ளது.

நுரைச்சோலை நிலக்கரி மின்உற்பத்தி நிலையத்திலுள்ள மின் பிறப்பாக்கிகள் செயலிழந்தமையால் இந்நிலைமை ஏற்பட்டது எனக் கூறினர்.

கடந்த காலங்களில் நுரைச்சோலை மின் பிறப்பாக்கிகள் செயலிழந்த சந்தர்ப்பங்களில், அது தொழிற்சங்க மாபியாக்களின் செயல் என விமர்சித்தனர். அவ்வாறெனில் இந்த அரசாங்கத்துக்கும் அந்த மாபியாக்களை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதா?

சூரிய மின் உற்பத்தி களங்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு அதிகம் என இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர் சங்கம் குறிப்பிடுகிறது.

சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்திகள் பிரபலமாகும் பட்சத்தில் நிலக்கரி மற்றும் டீசல் மாபியாக்கள் பாதிக்கப்படும். எனவே அவற்றைப் பாதுகாப்பதற்காகவே இவ்வாறான கதைகள் கூறப்படுகின்றன.

இந்த மாபியாக்களின் தேவைக்கேற்ப செயற்படுவதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளதா? நுரைச்சோலை மின்பிறப்பாக்கிகள் செயலிழக்கப் போவதை அறிந்தே அரசாங்கம் அதற்கு இடமளித்திருக்கிறது. இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேடைகளில் வீர வசனம் பேசுவதை விட, நடைமுறையில் ஆட்சி செய்வது சிக்கல் என்பதை இப்போது ஜே.பி.வி. புரிந்து கொண்டிருக்கும். ஏனைய ஆட்சி காலங்களில் இவ்வாறு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருப்பதாகக் குறிப்பிட்டு வீதிக்கிறங்கியிருப்பர்.

தமது ஆட்சி என்பதால் மௌனமாக இருக்கின்றனர். அளவுக்கதிகமாக மக்களை ஏமாற்ற முற்பட வேண்டாம். ராஜபக்சர்களை ஆட்சியில் அமர்த்தி, அவர்களை துறத்துவதற்கு மைத்திரிக்கு வாக்களித்து பின்னர் கோட்டாபயவை நாட்டை விட்டு ஓடச் செய்தவர்களே உங்களையும் ஆட்சியில் அமர்த்தியிருக்கின்றனர் என்பதை மறந்து விட வேண்டாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

June 7, 2025
வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்
செய்திகள்

வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் மாணவியின் வாய்த்தாடையை உடைத்த ஆசிரியர்

June 7, 2025
தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி
அரசியல்

தமிழரசுக் கட்சி மட்டுமல்ல எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது; தேசிய மக்கள் சக்தி

June 7, 2025
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
செய்திகள்

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

June 7, 2025
ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
Next Post
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க குவைத் பிரதமரை சந்தித்தார்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க குவைத் பிரதமரை சந்தித்தார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.