Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மகிந்த ராஜபக்சவின் இல்லத்தை பெறுவதற்கான சட்ட ரீதியான அதிகாரம் அராங்கத்துக்கு இல்லை

மகிந்த ராஜபக்சவின் இல்லத்தை பெறுவதற்கான சட்ட ரீதியான அதிகாரம் அராங்கத்துக்கு இல்லை

4 months ago
in செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள இல்லத்தை மீளப் பெறுவதற்கான சட்ட ரீதியான அதிகாரம் அராங்கத்துக்கு இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார்.

இதன்படி மக்கள் இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

“தேசிய ரீதியில் ஏற்பட்ட மின்தடைக்கு குரங்குகள் மீது பழிபோடும் அரசாங்கத்திடம் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வுகளும் இல்லை.

எனினும் இழப்பீடுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்

அதற்கமைய குற்றம் செய்யத் தூண்டியவர்களுக்கு எதிராக எம்மால் நீதிமன்றம் செல்ல முடியும். அதற்கமைய நீதிமன்றத்தின் ஊடாக அவர்களிடமிருந்து இழப்பீட்டைப் பெற்று, அதனை மீள அரசாங்கத்திடம் கையளிக்க முடியும்.

இலங்கை சுங்க வரலாற்றில் பாரிய மோசடியாக 300க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமையைக் குறிப்பிடலாம்.

அதனையும், தண்ணீரில் அடங்கியுள்ள புற்றுநோய் மூலக்கூறுகள் தொடர்பான சர்ச்சையையும், நெல்லுக்கான உத்தரவாத விலை குறித்த சிக்கல்களையும் மறக்கச் செய்வதற்காக தற்போது முன்னாள் அமைச்சர்களும், எம்.பி.க்களும் பெற்றுக் கொண்ட இழப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்டவாறு இந்த இழப்பீடுகள் மதிப்பீடு செய்யப்பட்ட முறைமையை தொடர்பில் எனக்கு தெரியப்படுத்துங்கள்.

25 இலட்சம் அதிகபட்ச இழப்பீடு தொடர்பிலும் தற்போது பேசப்படுகிறது. அனர்த்த முகாமைத்துவ சட்டம் என்பது இயற்கை பேரிடர்களால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்காக நிவாரண கொடுப்பனவு வழங்கும் முறைமையாகும்.

எவரேனும் ஒருவரது பரம்பரை சொத்துக்களை அழிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. அவற்றை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் மதிப்பீடு செய்யவும் முடியாது.

எனவே அனர்த்த முகாமைத்துவ சட்டத்தைக் காண்பித்து மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஐ.நா பொதுச்சபையின் புதிய தலைவராக அனலீனா பேர்பாக் தெரிவு
உலக செய்திகள்

ஐ.நா பொதுச்சபையின் புதிய தலைவராக அனலீனா பேர்பாக் தெரிவு

June 4, 2025
இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்
செய்திகள்

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்

June 4, 2025
போதை மாத்திரைகளுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கைது
செய்திகள்

போதை மாத்திரைகளுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கைது

June 4, 2025
முத்தையன்கட்டில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்
செய்திகள்

முத்தையன்கட்டில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல்

June 4, 2025
“ஆனையிறவு உப்பு” என்ற பெயரில் உள்ளுர் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை
செய்திகள்

“ஆனையிறவு உப்பு” என்ற பெயரில் உள்ளுர் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை

June 3, 2025
கனடாவில் புகலிடம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை
செய்திகள்

கனடாவில் புகலிடம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை

June 3, 2025
Next Post
மருத்துவமனைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு; வெளியான தகவல்

மருத்துவமனைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு; வெளியான தகவல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.