டெல்லி, என்.சி.ஆர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் டெல்லி, என்.சி.ஆர் நகரில் இன்று (17) அதிகாலை 5:36 மணியளவில் ஏற்பட்டது.

முதற்கட்ட தகவல்களின்படி, இந்த நிலநடுக்கம் டெல்லிக்கு அருகில் அமைந்திருந்ததுடன் 5 கிலோ மீட்டர் ஆழத்தில்,ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது.

நில நடுக்கத்தின் அதிர்வு குடியிருப்பு பகுதிகளில் உணரக்கூடிய அளவில் சக்திவாய்ந்ததாக அமைந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பலர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும் இதுவரை உயிர்சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
