அம்பாறை – பக்கிஎல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகிரிஆறு வனப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆணொருவரும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனையின்போது 7,500 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம், 148,000 மில்லிலீற்றர் கோடா, மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் செம்புச் சுருள்கள், பீப்பாய்கள் உள்ளிட்ட பல உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் குறித்த வனப்பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், பூர்வாங்க விசாரணைகளின் பின்னர் எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.








