பாணதுற – மோதரவில தொடர்மாடி குடியிருப்பில் சட்டவிரோத போதை மாத்திரைகளுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணதுற மற்றும் ஹொரண பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 810 சட்டவிரோத போதை மாத்திரைகளும் இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுவொன்றின் உறுப்பினர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக பாணதுற தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.








