Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மது போதையில் வீதியால் சென்றவரை மறித்து தலைக்கவசத்தால் தாக்கிய ஏறாவூர் பொலிஸார்-காணொளி

மது போதையில் வீதியால் சென்றவரை மறித்து தலைக்கவசத்தால் தாக்கிய ஏறாவூர் பொலிஸார்-காணொளி

4 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஏறாவூர் மயிலம்பாவெளி பிராதன வீதியில், மதுபோதையில், சிவில் உடை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றில் பிரயாணித்த இரு பொலிசாரின் மோட்டார் சைக்கிளை முந்திக்கொண்டு சென்ற வர்த்தகர் ஒருவரை நிறுத்தி, அவர் மீது தலைக்கசவத்தால் தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாயமடைந்துள்ளதுடன், தாக்குதலை மேற்கொண்ட இரு பொலிசாரும் அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் நேற்று (18) இரவு 7.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

வந்தாறுமூலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி, மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த வர்த்தகர் குணரட்னம் மதிகுமார், ஏறாவூர் மயிலம்பாவெளி பகுதியிலுள்ள கிராம சேவகர் காரியாலயத்துக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி சென்றபோது, இருவர் குறித்த மோட்டார் சைக்கிளை முந்தி சென்று “தாம் பொலிஸ், நீ பிழையாக மோட்டார் சைக்கிள் செலுத்துவதாக” தெரிவித்து, மோட்டார் சைக்கிளை நிறுத்தி, வர்த்தகர் மீது தமது தலைக்கவசத்தால் தலையில் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து அவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அங்கு பொதுமக்கள் கூடி, பொலிசாரை அங்கிருந்து செல்லவிடாது தடுத்து நிறுத்தி, பொலிஸ் அவசர இலக்கமான 1919 என்ற தோலைபேசி இலக்கத்துக்கு அறிவித்ததையடுத்து, அங்கு ஏறாவூர் பொலிசார் முச்சக்கரவண்டியில் வந்து விசாரணையை மேற்கொண்ட போது, தாக்குதலை நாத்திய பொலிசார் இருவரும் மதுபோதையில் இருப்பதை கண்டுபிடித்த பொலிசார், அவர்கள் இருவரையும் தமது முச்சக்கரவண்டியின் முன்னால் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தை அண்மித்ததும் குறித்த பொலிசார் இருவரும், பொலிஸ் நிலையத்துக்கு செல்லாமல் அருகிலுள்ள வீதியால் மோட்டார் சைக்கிளை செலுத்தி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

குறித்த இரு பொலிசாரும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற பிரிவில் கடமையாற்றி வருபவர்கள் எனவும், சம்பவதினமான நேற்று காலை11.00 க்கு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகிவரும் இருவரை கைது செய்வதற்காக கடமை கையோட்டில் கையொப்பமிட்டு, பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மது போதையில் தாக்குதலை மேற்கொண்ட இரு பொலிசாருக்கும் எதிராக பாதிக்கப்பட்ட வர்த்தகர் முறைப்பாடு செய்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

@battinaatham

மேலதிக தகவல்கள்👇👇👇 www.battinaatham.net #srilanka #battinaatham #ANURAKUMARADISSANAYAKE #Batticaloa #AnuraKumaraDissanayaka #batticaloa #archchuna #TNA #hariniamarasuriya #Eravur

♬ original sound – battinaatham – battinaatham
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்
காணொளிகள்

மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்

June 7, 2025
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

June 7, 2025
உயிரெடுக்கும் விஷம் எனும் தொணிப் பொருளில் விழிப்புணர்வு நாடக ஆற்றுகை நிகழ்வு
செய்திகள்

உயிரெடுக்கும் விஷம் எனும் தொணிப் பொருளில் விழிப்புணர்வு நாடக ஆற்றுகை நிகழ்வு

June 7, 2025
தலைக்கவசம் அணியாதோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; காத்தான்குடி பொலிஸ் எச்சரிக்கை
செய்திகள்

தலைக்கவசம் அணியாதோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; காத்தான்குடி பொலிஸ் எச்சரிக்கை

June 7, 2025
அருவிப் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் “அரச காணிகளில் வசிப்பவர்களுக்கான உரிமைகள் மற்றும் சட்ட வழிமுறைகள்” தொடர்பான விழிப்புணர்வு செயலமர்
செய்திகள்

அருவிப் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் “அரச காணிகளில் வசிப்பவர்களுக்கான உரிமைகள் மற்றும் சட்ட வழிமுறைகள்” தொடர்பான விழிப்புணர்வு செயலமர்

June 7, 2025
உலக வாழ் முஸ்லிம்களின் புனித ஹஜ் பெருநாள் இன்று
செய்திகள்

உலக வாழ் முஸ்லிம்களின் புனித ஹஜ் பெருநாள் இன்று

June 7, 2025
Next Post
இன்று முதல் கடவுச்சீட்டு பெற 24 மணி நேர சேவை

இன்று முதல் கடவுச்சீட்டு பெற 24 மணி நேர சேவை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.