இலங்கை கிரான் மெதடிஸ்த திருட்சபையின் ‘ஜொபியல்’ சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஏற்பாட்டில் ‘உயிரெடுக்கும் விஷம்” எனும் தொணிப் பொருளில் விழிப்புணர்வு நாடக ஆற்றுகை நிகழ்வு பாடசாலைகள் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு நிகழ்வாக நேற்று கல்குடா கல்வி வலயத்தின் உள்ள சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயம் மற்றும் முறக்கொட்டான்சேனை இராம கிருஷ்ண மிஷன் வித்தியாலய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர் மத்தியில் நிகழ்த்திக் காட்டப்பட்டது.
இதன்போது மாணவர் மத்தியில் போதைப் பொருள் பாவனை உள்ளதை தடுப்பதுடன் அதன் தாக்கங்கள் தொடர்பாக விழிப்புணர்வு நாடக ஆற்றுகை மூலம் நிகழ்த்திக் காட்டப்பட்டது.

இதனை மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் அவதானித்தனர். இவ் நிகழ்வானது கிரான் ஜொபியல் ஆசிரியர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
குறித்த நிகழ்வு தொடர்பாக வாழைச்சேனை சேகரத்தின் முகாமைக் குரு அருட்கலாநிதி கே.எஸ்.நிசாந்தன் இதற்கான ஆலோசனையை வழங்கியிருந்தார்.
இந் நிகழ்வில் இலங்கை கிரான் மெதடிஸ்த திருட்சபையின் அருட்திரு எனோசன் போதகர் கிரான் பிரதேச செயலக சமூதாயம் சார் உத்தியோகத்தர் ப.கோபு, பாடசாலை அதிபர்களான சி.சுரேஸ்குமார்,ம.தவனேஸ்வரன் ஆகியோர்கள் பங்குபற்றியிருந்தனர்.
















