கொழும்பு நீதிமன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வவுனியா மேல் நீதி மன்றம் முன்பாக பதாகை காட்சிப்படுத்தப்பட்டது.
நேற்று (20) காட்சிப்படுத்தப்பட்ட குறித்த பதாதையானது அகில இலங்கை நீதிமன்ற ஊழியர் சங்கத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில், திறந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு பிரயோகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
கௌரவ நீதிபதிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா? என அப் பதாதையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.