மட்டக்களப்பு ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது 5 பேர் கொண்ட குழுவினர் வாளால் வெட்டி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரையும் எதிர்வரும் 4ம் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறும், ஏனைய இரு சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்கனப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார்.
ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் சம்பவதினமான கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மின்னொளியில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வாள்களுடன் நுழைந்த 5 பேர் கொண்ட வாள் வெட்டுக்குழு விளையாடிக் கொண்டிருந்த சிலர் மீது துரத்தி துரத்தி வாளால் வெட்டி தாக்குதல் நடாத்தியதில், இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் தப்பிஓடி தலைமறைவாகியுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை (23) இரவு 4 பேரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை(24) ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஏனைய இரு சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.