Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை; விவசாய,மின் உற்பத்திக்கு நீர்த்தட்டுப்பாடு!

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை; விவசாய,மின் உற்பத்திக்கு நீர்த்தட்டுப்பாடு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாடளாவிய ரீதியாக ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக நீர்ப்பாசன திணைக்களத்திற்கு
சொந்தமான அறுபத்து மூன்று பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 32 சதவீதமாக குறைவடைந்துள்ளது.

அத்துடன் மகாவலி அதிகார சபையின் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏனைய நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவும் 35 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொத்மலை. விக்டோரியா. ரன்தெனிகல, மவுசாகலை உள்ளிட்ட மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு குறைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக சில நீர்த்தேக்கங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் மின் உற்பத்தி நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளமையினால், வரட்சியான
காலநிலை தொடருமானால் நீர் மின் உற்பத்தி பாரியளவில் பாதிக்கப்படலாம் என மகாவலி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் நிலாந்த தனபால தெரிவித்தார்.

இதேவேளை, உடவலவ நீர்த்தேக்கத்திலிருந்து நெற்பயிர்களுக்கு நீர் வழங்குமாறு கோரி எம்பிலிப்பிட்டிய நகர விவசாயிகள் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. அத்துடன் வறட்சி காரணமாக சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் அந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 20 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, சமனலவெவ நீர்த்தேக்கத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு நீர் விடப்பட்டால் தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள பல மாவட்டங்களில் சுமார் 04 மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பயிர்ச்செய்கைக்கு போதிய நீர் வழங்கப்பட வேண்டுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்திலும் அவதானம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, எதிர்காலத்தில் மழை வீழ்ச்சி மேலும் குறைவடையும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

195 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களை ஒப்புவித்து சோழன் உலக சாதனை படைத்த மட்டக்களப்பு 2 வயது குழந்தை
செய்திகள்

195 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களை ஒப்புவித்து சோழன் உலக சாதனை படைத்த மட்டக்களப்பு 2 வயது குழந்தை

May 19, 2025
ஓட்டமாவடி மத்திய கல்லூரி உயர்தர மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
செய்திகள்

ஓட்டமாவடி மத்திய கல்லூரி உயர்தர மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

May 19, 2025
”முள்ளிவாய்க்கால் ஒரு புண்ணிய பூமி” – உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்திய சிங்கள இளைஞன்
செய்திகள்

”முள்ளிவாய்க்கால் ஒரு புண்ணிய பூமி” – உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்திய சிங்கள இளைஞன்

May 19, 2025
பாதுகாப்பு தரப்பு முன்னிலையில் கிழக்கு தேற்றாத்தீவு பிரதேசத்தை சேர்ந்த கடற்கொள்ளையரை படம்போட்டு காட்டிய மீனவர்கள்
செய்திகள்

பாதுகாப்பு தரப்பு முன்னிலையில் கிழக்கு தேற்றாத்தீவு பிரதேசத்தை சேர்ந்த கடற்கொள்ளையரை படம்போட்டு காட்டிய மீனவர்கள்

May 19, 2025
கல்கிஸை துப்பாக்கிசூடு தொடர்பில் முன்னாள் விமானப்படை சிப்பாய் கைது
செய்திகள்

கல்கிஸை துப்பாக்கிசூடு தொடர்பில் முன்னாள் விமானப்படை சிப்பாய் கைது

May 19, 2025
டெங்கு மற்றும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
செய்திகள்

டெங்கு மற்றும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

May 19, 2025
Next Post
ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் குரல்கொடுக்க வேண்டும்; ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் வேண்டுகோள்!

ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் குரல்கொடுக்க வேண்டும்; ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் வேண்டுகோள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.