வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடை ஒன்றிற்குள் சட்டை ஊசிகள் இரண்டு காணப்பட்டுள்ளன.
வவுனியா, பழைய பேரூந்து நிலையம் அருகில உள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு நேற்று (03) சென்ற ஒருவர் அங்கு வடையினை கொள்வனவு செய்துள்ளார்.

குறித்த வடையை வீட்டில் சென்று சாப்பிட்ட போது அவ்வடைககுள் பெரிய சட்டை ஊசிகள் இரண்டு காணபட்டுள்ளன.
இதனையடுத்து அந்த வடையை அதன் முகாமையாளரிடம் காட்டி ஊசி காணப்பட்டமை தொடர்பில் தெரியப்படுததப்பட்டுள்ளது.
இதன்போது, இச்சம்பவம், தவறுதலாக இடம்பெற்றுள்ளதாகவும், இனிவரும் காலத்தில் இவ்வாறு நடைபெறாது எனவும் கூறி வடையை வாங்கியவரிடம் சைவ உணகவ முகாமையாளர் மன்னிப்பு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.