மட்டக்களப்பு சர்வதேச விமான நிலைய காணிக்குள் சற்றுமுன்னர் 03 யானைகள் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மட்டக்களப்பு வனவிலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த யானைகள் வவுணதீவு வழியாக குறித்த காணிக்குள் நுழைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் புதூர் மற்றும் அதனை அண்டியுள்ள மக்கள் சற்று அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.